பக்கம் எண் :


571


     (வி - ம்.) கெண்டுதல் - வெட்டுதல்.

     நின்பாற் கழிபேரன்பினே னென்பாள், நீ வருநெறிக்கு அஞ்சுவல் என்றாள். நம்பால் இவ்வளவு அன்புடைமையின் இனி இரவுவரின் இறைமகள் இறந்துபடுவதும் ஆமெனக்கொண்டு இந் நெறியில் வாராதீம் என்றதனாலே பிறிதொன்று செய்யக் கடவதின்மையாற் பிற்றை ஞான்று வரைவொடு புகுவானாவது. அரும்புழை ஒல்கி என்றும் பாடம்.

     உள்ளுறை:- தினையைத் தின்ற பன்றியைக் கானவன் கொணர்ந்து கொடுப்ப அவன் மனைவி அதனை வாங்கிப் பகுத்துச் சுற்றத்தார்கள் பலர்க்கும் முறைப்படி கொடுக்கு மென்றது, "நீ இவளை மணஞ்செய்து கொண்டு இல்லறம் நிகழ்த்தத் தொடங்கி வேற்று நாட்டுச் சென்று அடங்காத பகைவரை வென்று பொருளீட்டி இவளிடம் அளித்து இவளும், "தெய்வம், விருந்து, ஒக்கல்" முதலாயினார்க்குக் கொடுக்குமாறு செய்வாயாக" வென்றதாம்.

     மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவு கடாதல்.

(336)
  
     திணை : பாலை.

     துறை : (1) இது, தோழி தலைமகன் பொருள்வயிற் பிரிதலுற்றானது குறிப்பறிந்து விலக்கியது.

     (து - ம்,) என்பது, தோழி கற்பியலிலே பொருள்வயிற் பிரிகின்ற தலைமகனது குறிப்பறிந்து 'தலைவனே! உலகம் படைத்தகால முதலாகப் பொருளீட்டி வாழ விரும்புவோர் தம்மை அடைக்கலம் புகுந்தாரைப் பாதுகாக்க வேண்டும் என்னும் அறநெறியை மறந்தனரோ? அவர் சிறந்தவரே போலு'மென்று பிறர்மேல் வைத்து அவனது செலவு விலக்குவாளாய் மறுத்துக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "பிரியுங்காலை எதிர் நின்று சாற்றிய மரபுடை எதிரும்" (தொல். கற். 9) என்னும் விதி கொள்க.

     துறை : (2) தோழி உலகியல் கூறிப் பிரிவுணர்த்தியதூஉமாம்.

     (து - ம்,) என்பது, பொருளீட்டுமாறு பிரிபவர் பிரியவேண்டுபவரே; ஆயினும், அடைந்தாரைக் காப்பது மேலான அறமன்றோ? அதனை "மறந்தனரல்லர் சான்றோ'ரெனக் கூறாநிற்பதுமாகும். (உரை இரண்டற்கு மொக்கும்.)

     (இ - ம்.) இதுவுமது.

    
உலகம் படைத்த காலைத் தலைவ 
    
மறந்தனர் கொல்லோ சிறந்திசி னோரே 
    
முதிரா வேனில் எதிரிய அதிரல் 
    
பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர் 
5
நறுமோ ரோடமொடு உடனெறிந்து அடைச்சிய