பக்கம் எண் :


600


யோட்டுகின்ற உப்புவாணிகர்; அளம் போகு ஆகுலம் கடுப்ப - அளத்து வெளியிலே போகும் பேரொலிபோல; நின் நட்பு கௌவை ஆகின்றது - நின்னால் செய்யப்பட்ட கேண்மையானது பழிச்சொல்லுக்கிடமாயிராநின்றது; அது பொறுத்தல் யாவது - அங்ஙனம் பரந்த அலரால் இற்செறிக்கப்பட்ட யாங்கள் அவ் வில்வயிற் செறிப்பை எவ்வாறு பொறுப்பது? ஆய்ந்து கூறுவாயாக! எ - று

.

     (வி - ம்.) ஒழுகை - பண்டி. பெண்ணை அரையொழித்த வீழ்காவோலை யென்பது, பனையின் அடியிலிருந்து வெட்டாது விடப்பட்டிருந்து அப்பொழுது வெட்டி வீழ்த்திய ஓலையென்க.

     இறைச்சி :- ஓலை சூழ்சிறையாத்த கானலென்றது, எமரும் அன்னையும் எமது இல்லகத்தைக் காவலோம்பலாயினா ராதலின், நீ இரவுக்குறி வருவதற்கு இயலாதெனவும், புன்னை அடிமரத்திலே தோணி இயக்கமறப் பிணித்ததென்றது தலைமகள் புறத்துவந்து இயங்காவாறு இல்வயின் செறிக்கப்பட்டாளெனவுங் கூறியதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

     இரண்டாந் துறைக்கு அங்குக்கூறிய குறிப்பை விரித்துரைத்துக்கொள்க. அதற்கு மெய்ப்பாடு - உவகை. பயன் - மகிழ்தல்.

     (பெரு - ரை.) அது - அக் கௌவையை எனினுமாம். காவோலைப் பெயர் - பனையின் அடிதொட்டு நுனிகாறும் அடர்ந்திருந்து அப் பனைக்குப் பாதுகாவலாக அமைதலின் அவ்வோலைகள் காவோலை எனப்பட்டன என்க. ஆகுலம் - ஆரவாரம்.

(354)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : (1) இது, தோழி அருகடுத்தது.

     (து - ம்.) என்பது, களவின் வழிவந்தொழுகுந் தலைமகன் ஒரோவொருகால் அருகி வருதலை யறிந்த தோழி அவனது அருகில் நெருங்கி, 'என் தோழியை நீ விரும்பி முயங்கி இன்புறா யாயினும், என்பால் நீ கொண்ட அன்பின் மிகுதியினாலேனும் கைசோர விடாது அவளை அணைந்து தலையளி செய்வாயாக; நீயே களைகணன்றி அவள் பிறிதுடையளல்ல'ளென்பதுபடக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் பாங்கு என்றதனாற் கொள்க.

     துறை : (2) தோழி தலைமகளது ஆற்றாமைகண்டு வரைவுகடாயதூஉமாம்.

     (து - ம்.)என்பது, வெளிப்படை. (உரை இரண்டற்கு மொக்கும்.)