பக்கம் எண் :


260


    இனி, தலைவி தானே தலைவனொடு போவல் என்று கூறுதல் நாணழிவாய் வழுவாம் பிறவெனின் அற்றன்று. நாணினும் சிறந்த கற்பினைப் பாதுகாத்தலே அவள் கருத்தாதலின் வழுவன்றென்க. இதனை,

  
" ஒருதலை உரிமை வேண்டினும் மகடூஉப் 
  
 பிரிதல் அச்சம் உண்மை யானும் 
  
 அம்பலும் அலரும் களவுவெளிப் படுக்குமென்று 
  
 அஞ்ச வந்த ஆங்கிரு வகையினும் 
  
 நோக்கொடு வந்த இடையூறு பொருளினும் 
  
 போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றும்" (தொல். பொருளியல். 29) 

எனவரும் நூற்பாவானும் அதற்கு ஆசிரியர் இளம்பூரணர் வகுத்த நல்லுரையானுந் தெளிக.

(149)
  
    திணை : மருதம்.

    துறை : இது, தலைநின்றொழுகப்படாநின்ற பரத்தை, தலைவனை நெருங்கிப் பாணற்குரைத்தது.

    (து - ம்,) என்பது, தலைமைகொண்டொழுகும் பரத்தையொருத்தியைக் கலந்து பின்பு அவளைக் கைவிட்டு வேறொரு பரத்தைபாற் சென்ற தலைவனை அம் முதற்பரத்தை நெருங்குதலும் அவளது வெகுளி தணிக்கும்படி அவன் பாணனைவிடுப்ப அப் பாணனை நோக்கிப் பாணனே, நுந்தலைமகன் எமது சேரியில்வந்து காட்டி எந்நெஞ்சங் கொண்டமை விடாதுகண்டாய் ; எம் அன்னை சினமுடையள் இரங்காளாதலின் அவளாலொறுக்கப்படுவதுமுண்டு. அதனால் அவன் யாவராலும் நகைத்தற்குரியன் என இகழ்ந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனைப், "புல்லுதன் மயக்கும் புலவிக் கண்ணும்" (தொல். கற். 10) எனவரும் நூற்பாவின்கண் "இவற்றோடு பிறவும்" என்பதனால் அமைத்துக்கொள்க.

    
நகைநன் குடையன் பாணநும் பெருமகன் 
    
மிளைவலி் சிதையக் களிறுபல பரப்பி 
    
அரண்பல கடந்த முரண்கொள் தானை 
    
வழுதி வாழிய பலவெனத் தொழுதீண்டு 
5
மன்னெயில் உடையோர் போல அஃதுயாம் 
    
என்னலும் பரியலோ இலமெனத் தண்நடைக் 
    
கலிமா கடைஇ வந்தெம் சேரித் 
    
தாருங் கண்ணியுங் காட்டி ஒருமைய 
    
நெஞ்சம் கொண்டமை விடுமோ வஞ்சக் 
10
கண்ணுடைச் சிறுகோல் பற்றிக் 
    
கதம்பெரிது உடையள்யாய் அழுங்கலோ இலளே.