பாலைபாடிய பெருங்கடுங்கோ. (பி-ம்.) 1. ‘உமணர்ச் சேர்ந்து’; 2-3. ‘பெருங் காட்டின்னா’: 4. ‘தமியேற்கு’.
(ப-ரை.) பெரும - தலைவ, உமணர் - உப்பு வாணிகர், சேர்ந்து கழிந்த மருங்கின் - பலர் கூடிக் கடந்து சென்ற பக்கத்தையும், அகன்றலை - விரிந்த இடத்தையும் பெற்ற, ஊர் பாழ்த்தன்ன - குடியிருந்த ஊர் பாழாகப் போனதைப் போன்ற தோற்றத்தையுடைய, ஓமை பெரு காடு - ஓமை மரங்கள் வளர்ந்த பெரிய பாலை நிலங்கள், இன்னா - இன்னாமையையுடையன, என்றிராயின் - என்று கூறித்