உலோச்சன் (பி-ம். உலோகச்சனார்.) (பி-ம்) 3. ‘மன்றலம் பெண்ணை’, ‘மன்றற் பெண்ணை’, ‘மன்றப்பெண்ணை’; 5.‘தோழி நாநகப்’.
(ப-ரை.) தோழி -, கடல்பாடு அவிந்து - கடலானதுஒலி அடங்க, கானல் மயங்கி - கடற்கரைச் சோலை மயக்கத்தையுடையதாக, துறை நீர் இரு கழி - துறையையும்நீரையும் உடைய கரிய கழி, புல்லென்றன்று - பூக்கள்கூம்பியதனால் பொலிவழிந்தது; மன்றம் அம் பெண்ணை -மன்றத்தின் கண் உள்ள அழகிய பனைமரத்தினது, மடல் சேர்வாழ்க்கை - மடலின் கண்ணே பொருந்திய வாழ்க்கையையுடைய, அன்றிலும் - அன்றிற் பறவையும், பையென - மெல்ல, நரலும் - கூவும்; நாம் தம் புலப்பினும் - முன்புநாம் தம்மைப் புலந்தாலும், பிரிவு ஆங்கு அஞ்சி - அவ்விடத்துப் பிரிதலை அஞ்சி, தணப்பு அரு காமம் - நீங்குதற்கரிய காம இன்பத்தை, தண்டியோர் - அலைத்தும்பெற்றவராகிய, அவர் - தலைவர், இன்று--, வருவர்.
(முடிபு) தோழி, கழி புல்லென்றன்று; அன்றிலும் நரலும்; தண்டியோர் இன்று வருவர்.
(கருத்து) தலைவர் இன்று வருவர்.
(வி-ரை.) கடல் பாடவிதல் முதலியன இரவு வந்ததைப் புலப்படுத்தின. கடல் ஒலியடங்குதலாவது, வலைஞரும் கலவரும் தொழி லொடுங்கிஅகஞ் சேர்ந்தமையின் அவர்களால் உண்டாகும் ஆர்ப்பு அடங்குதல்.இருளினால் கானல் மயங்கியது. அவிந்து, மயங்கி: எச்சத் திரிபுகள்.
அன்றில் பெரும்பாலும் பனைமடலிலே வாழ்வது. வருவர் கொல்:கொல், அசை நிலை
(புறநா 98:18, உரை); “வருவர் கொல்”
(கலி. 11:5)