பக்கம் எண் :


478


விரிபூம் பெருந்துறை", "கரைசேர் மருதம்" (ஐங். 7:4-5, 31:3, 33:2, 74:3); "திருமருத முன்றுறை", "திருமருத நீர்ப்பூந் துறை", "தீம்புனல் வையைத் திருமருத முன்றுறையால்", "திருமருத முன்றுறை முற்றங் குறுகி" (பரி. 7:83, 11:30, 22:45, திரட்டு, 2:72); "திசை திசை தேனார்க்குந் திருமருத முன்றுறை" (கலி. 26:13); "வருபுனல் வையை வார்மண லகன்றுறைத், திருமரு தோங்கிய விரிமலர்க் காவின்", "துறையணி மருதமொடு" (அகநா. 36:9-10, 97:19); "உயர்சினை மருதத் துறை" (புறநா. 243:6); "வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை" (சிலப். 14:72.)

    5-6. "மட்டப் புகாவிற் குட்டுவ ரேறே" (பதிற். 90:26.)

    8. மாணலம்: குறுந். 74:5, ஒப்பு.

(258)
  
(தோழி அறத்தொடு நின்றபின், அங்ஙனம் தான் செய்ததைத் தலைவன் அறிந்தால் வரைந்து கொள்ளுவதற்குரிய முயற்சிகளைச் செய்வானென்று தான் எண்ணியதைத் தலைவிக்கு உணர்த்துவாளாய், "பொய் சொல்லுவதில் பயன் யாது? தலைவன் நன்னெஞ்சமுடையான்" என்று கூறியது.)
 259.   
மழைசேர்ந் தெழுதரு மாரிக் குன்றத் 
    
்தருவி யார்ந்த தண்ணறுங் காந்தள் 
    
்முகையவிழ்ந் தானா நாறு நறுநுதற்  
    
பல்லிதழ் மழைக்கண் மாஅ யோயே 
5
ஒல்வை யாயினுங் கொல்வை யாயினும் 
    
நீயளந் தறிவைநின் புரைமை வாய்போற் 
    
பொய்ம்மொழி கூறலஃ தெவனோ 
    
நெஞ்ச நன்றே நின்வயி னானே. 

என்பது காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தோழி, அறத்தொடு நின்று,அவனே பரிகரிப்பன் என்று கருதியதனைத் தலைமகளும் நயப்பாளாகக் கூறியது.

    (நின்று கூறியதென இயைக்க.)

பரணர்.

    (பி-ம்.) 6. ‘வாய்போலப்’; 8. ‘நின்னுயிர் நானே’.

    (ப-ரை.) மழை சேர்ந்து எழு தரும் - மேகங்கள் சேர்ந்து எழுந்த, மாரி குன்றத்து - மழையை உடைய மலையின் இடத்துள்ள, அருவி ஆர்ந்த - அருவிக்கு அருகில் பொருந்திய,தண் நறு காந்தள் முகை அவிழ்ந்து - தண்ணிய நறிய காந்தளரும்புகள் விரிந்து, ஆனா நாறும் நறுநுதல் - அமையாதனவாய் மணம் வீசுகின்ற நறிய நெற்றியையும்,