வேடர் கலையை எய்தல்: "அள்ள லாடிய புள்ளி வரிக்கலை, வீளை யம்பின் வில்லோர் பெருமகன்"
(நற். 265:2-3.) 6. செங்கோல் வாளி: குறுந். 1:2, ஒப்பு.
6-7. தலைவியின் கண்ணுக்குக் குருதியொடு பறித்த அம்பு: "ஏனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த, பகழி யன்ன சேயரி மழைக்கண்", "கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப், பச்சூன் பெய்த பகழி போலச், சேயரி பரந்த வாயிழை மழைக்கண்", (நற். 13:3-4, 75:6-8); "நிறத்தெறிந்து பறித்த நிணங்கொள்வேற், றிறத்தை வௌவிய சேயரிக் கண்ணினாள்" (சீவக. 993.)
8. கூந்தலின் மணம்: குறுந். 2:4-5, ஒப்பு.
நாறிருங் கூந்தல்: புறநா. 113:9.
கொடிச்சி: குறுந். 214:3, 291:2, 335:7, 360:6.
1-8. தோள் தீண்டல்: குறுந். 50:5, ஒப்பு. 193: 5, ஒப்பு.
தோள் தீண்டற் கரிது: குறுந். 100:7.
(272)
(தலைவன் பிரிவான் என எண்ணிக் கவன்ற தலைவியை நோக்கி,"தலைவன் பிரிய எண்ணினும் நம் நிலை நோக்கிச் செலவு தவிர்வான்" என்று தோழி கூறித் துணிவை உண்டாக்கியது.)