| "நெடுங்கழை முளிய வேனி னீடிக் |
| கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின் |
| வெய்ய வாயின முன்னே யினியே |
| ஒண்ணுத லரிவையை யுள்ளுதொறும் |
| தண்ணிய வாயின சுரத்திடை யாறே", |
| "வேனி லரையத் திலையொலி வெரீஇப் |
| போகில்புகா வுண்ணாது பிறிதுபுலம் படரும் |
| வெம்பலை யருஞ்சுர நலியா |
| தெம்வெங் காதலி பண்புதுணைப் பெற்றே", |
| "பொறிவரித் தடக்கை வேத லஞ்சிச் |
| சிறுகண் யானை நிலந்தொடல் செல்லா |
| வெயின்முளி சோலைய வேயுயர் சுரனே |
| அன்ன வாரிடை யானும் |
| தண்மை செய்தவித் தகையோள் பண்பே" (ஐங். 322, 325, 327.) |
என்னும் செய்யுட்களிலும் காணலாம்.
மேற்கோளாட்சி 1. செய்யுளில் குறியதன்கீழ் ஆக்குறுகி உகரமேற்றது (தொல். உயிர்மயங்கு. 32, ந.; இ.வி. 90.)
ஒப்புமைப் பகுதி 1. புன்கால் உகாய்: "புல்லரை யுகாஅய்" (குறுந். 363:4.)
(பி-ம்.) புன்காய் உகாய்: நற். 66:1-2. உகாய்: பெருங். 1.52:37.
1-3. கனியை அம்பால் உதிர்த்தல்: சீவக. 1640-41; வி.பா. பழம்பொருந்து. 3.
3-5. "ஊரில்ல வுயவரிய, நீரில்ல நீளிடைய, பார்வ லிருக்கைக்கவிகண்ணோக்கிற், செந்தொடை பிழையா வன்க ணாடவர்" (புறநா. 3:17-20.) 6. இன்னாக் கானம்: குறுந். 124:2-3.
(274)
(தலைவன் கூறிச் சென்ற பருவம் வந்த காலத்துத் தலைவியை நோக்கி, "மணி ஒலி செவிப்படுகின்றது; அது தலைவனது தேர்மணி ஓசையோ என்று சென்று பார்ப்போம்" என்று தோழி கூறியது.) 275. | முல்லை யூர்ந்த கல்லுய ரேறிக் |
| கண்டனம் வருகஞ் சென்மோ தோழி |
| எல்லூர்ச் சேர்தரு மேறுடை யினத்துப் |
| புல்லார் நல்லான் பூண்மணி கொல்லேர் |
5 | செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு |
| வல்வி லிளையர் பக்கம் போற்ற |
| ஈர்மணற் காட்டாறு வரூஉம |
| தேர்மணி கொல்லாண் டியம்பிய வுளவே. |
என்பது பருவ வரவின்கண் வரவு நிமித்தம் தோன்றத் தோழி தலைமகட்கு உரைத்தது.
(வரவு நிமித்தம்: குறுந். 260, கருத்து.)