பக்கம் எண் :


506


  
"நெடுங்கழை முளிய வேனி னீடிக் 
  
 கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின் 
  
 வெய்ய வாயின முன்னே யினியே 
  
 ஒண்ணுத லரிவையை யுள்ளுதொறும் 
  
 தண்ணிய வாயின சுரத்திடை யாறே", 
  
"வேனி லரையத் திலையொலி வெரீஇப் 
  
 போகில்புகா வுண்ணாது பிறிதுபுலம் படரும் 
  
 வெம்பலை யருஞ்சுர நலியா 
  
 தெம்வெங் காதலி பண்புதுணைப் பெற்றே", 
  
"பொறிவரித் தடக்கை வேத லஞ்சிச் 
  
 சிறுகண் யானை நிலந்தொடல் செல்லா 
  
 வெயின்முளி சோலைய வேயுயர் சுரனே 
  
 அன்ன வாரிடை யானும் 
  
 தண்மை செய்தவித் தகையோள் பண்பே"      (ஐங். 322, 325, 327.) 

என்னும் செய்யுட்களிலும் காணலாம்.

     மேற்கோளாட்சி 1. செய்யுளில் குறியதன்கீழ் ஆக்குறுகி உகரமேற்றது (தொல். உயிர்மயங்கு. 32, ந.; இ.வி. 90.)

     ஒப்புமைப் பகுதி 1. புன்கால் உகாய்: "புல்லரை யுகாஅய்" (குறுந். 363:4.)

     (பி-ம்.) புன்காய் உகாய்: நற். 66:1-2. உகாய்: பெருங். 1.52:37.

     1-3. கனியை அம்பால் உதிர்த்தல்: சீவக. 1640-41; வி.பா. பழம்பொருந்து. 3.

     3-5. "ஊரில்ல வுயவரிய, நீரில்ல நீளிடைய, பார்வ லிருக்கைக்கவிகண்ணோக்கிற், செந்தொடை பிழையா வன்க ணாடவர்" (புறநா. 3:17-20.) 6. இன்னாக் கானம்: குறுந். 124:2-3.

(274)
  
(தலைவன் கூறிச் சென்ற பருவம் வந்த காலத்துத் தலைவியை நோக்கி, "மணி ஒலி செவிப்படுகின்றது; அது தலைவனது தேர்மணி ஓசையோ என்று சென்று பார்ப்போம்" என்று தோழி கூறியது.)
 275.    
முல்லை யூர்ந்த கல்லுய ரேறிக்  
    
கண்டனம் வருகஞ் சென்மோ தோழி 
    
எல்லூர்ச் சேர்தரு மேறுடை யினத்துப் 
    
புல்லார் நல்லான் பூண்மணி கொல்லேர் 
5
செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு  
    
வல்வி லிளையர் பக்கம் போற்ற 
    
ஈர்மணற் காட்டாறு வரூஉம 
    
தேர்மணி கொல்லாண் டியம்பிய வுளவே. 

என்பது பருவ வரவின்கண் வரவு நிமித்தம் தோன்றத் தோழி தலைமகட்கு உரைத்தது.

     (வரவு நிமித்தம்: குறுந். 260, கருத்து.)