பக்கம் எண் :


610


  
“முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின  
  
 தலைமுடி சான்ற தண்டழை யுடையை  
  
 ....... ........ ........ .........  
  
 பேதை யல்லை மேதையங் குறுமகள்  
  
 பெதும்பைப் பருவத் தொதுங்கினை புறத்தென”         (அகநா. 7:1-7.)  

     கிழக்கு - கீழ் (குறள். 488.) பல் செறிந்திருத்தல் அழகு பயப்பது;“செறியெயிற் றரிவை” (குறுந். 2:4) என்று முன் வந்தது காண்க. பறிமுறை - விழுந்தெழுந்த முறைமை (கலி. 93:19, ந.) அணங்குதற்கு யான் தன் அறிவலென்றது, யான் அவளது அழகு முதலியவற்றை அறிந்த காரணத் தாலே அணங்கினாளென்றபடி; இதனால் யான் அறியாது வாளா சென்றே னெனின் அணங்கப்படேனென்பதும் போதரும். அணங்குதற்கு - அணங்குதலாலென உருபுமயக்கமாக்குதலும் ஒன்று.

     பல்லும், சுணங்கும்: உம், இறந்தது தழீஇயது.

    (மேற்கோளாட்சி) 2. கிழக்கென்பது கீழென்னும் பொருளில் வந்தது (தொல். உவம. 5, பேர்.)

    5. பின்னின்ற தலைமகன் கூறியதனால், தன்கட்டோன்றிய வருத்தம்பற்றிய இளிவரலென்னும் மெய்ப்பாடு வந்தது (தொல். மெய்ப். 6, பேர்; இ. வி. 578.)

    5-7. தலைமகள் கட்டுரையாதிருத்தலின் தலைமகன் தமரின் எய்தல்வேண்டினமையின் கட்டுரையின்மையின் வரைவுகடாதலாயிற்று (தொல். மெய்ப். 23, பேர்.)

    மு. இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் வரைதல் வேண்டிக்கூறியது (தொல். களவு. 11, இளம்.); புணர்தல் நிமித்தம் வந்தது (தொல்.அகத். 14, ந.); இறையோன் இறைவி தன்மை இயம்பியது (நம்பி. 144.)

    ஒப்புமைப் பகுதி 1. முகிழ் முகிழ்த்தல்: ‘அம்பலென்பது முகிழ் முகிழ்த்தல்’ (இறை. 22, உரை.)

    3. பல் பறிமுறை நிரம்புதல்: “நறுமுல்லை நேர்முகை யொப்ப நிரைத்த, செறிமுறை பாராட்டி னாய்மற்றெம் பல்லின், பறிமுறை பாராட்டினையோ வைய” (கலி. 22:9-11.) 5. குறுந். 142:2-3.

    6. யாங்காகுவள்: குறுந். 159:5, ஒப்பு.

(337)
  
(தலைவனது பிரிவினால் வருந்திய தலைவியை நோக்கி, “தலைவன்வந்தான்” என்று துணிவுபற்றிக் கூறித் தோழி ஆற்றுவித்தது.)
  338.    
திரிமருப் பிரலை யண்ண னல்லே 
    
றரிமடப் பிணையோ டல்குநிழ லசைஇ 
    
வீததை வியலரிற் றுஞ்சிப் பொழுதுசெலச் 
    
செழும்பயறு கறிக்கும் புன்கண் மாலைப் 
5
பின்பனிக் கடைநாட் டண்பனி யச்சிரம் 
    
வந்தன்று பெருவிற றேரே பணைத்தோள் 
    
விளங்குநக ரடங்கிய கற்பின் 
    
நலங்கே ழரிவை புலம்பசா விடவே.