உறையூர் முதுகொற்றன். (பி-ம்) 2. ‘சொல்லாதீமோ’; 5. ‘இளைவந்து’.
(ப-ரை.) சிறுபிடி துணையே - சிறிய பிடிபோன்ற வளுக்குத் துணையாகியவனே, எல்லும் எல்லின்று -சூரியனும் விளக்கம் இலனானான், சாத்து வந்து இறுத்தென -வணிகர்கூட்டம் வந்து அடைந்ததாக, வேற்று முனை வெம் மையின் - பகைப்புலத்தே கொள்ளும் பகைமையைப் போல, வளை அணி நெடு வேல் ஏந்தி - வளையை யணிந்த நெடிய வேலை ஏந்தி, மிளை வந்து - காவற்காட்டினிடத்தே வந்து,பெயரும் தண்ணுமை குரல் - பெயரும் ஆறலைப்போரதுதண்ணுமையென்னும் வாத்தியத்தினுடைய முழக்கத்தினது,