11 | | மனை நடு வயலை வேழம் சுற்றும் | | துறை கேழ் ஊரன் கொடுமை நாணி, | | 'நல்லன்' என்றும், யாமே; | | 'அல்லன்' என்னும், என் தட மென் தோளே. | | பாணன் முதலாயினார்க்குத் தலைமகன் கொடுமை கூறி வாயில் மறுத்த தலைமகள், கழறிய பாங்கற்கு வாயில் நேர்வாள், சொல்லியது. 'தலைவன் எவ்வாறு தப்பி ஒழுகினும், அவன் கொடுமை நின்னால் புலப்படுதல் தகாது' என்று கழறிய பாங்கிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். 1 | | |
|
|
12 | | கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும் | | துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும் | | ஆற்றுகதில்ல, யாமே; | | தோற்கதில்ல, என் தட மென் தோளே. | | உழையர் நெருங்கிக் கூறிய திறமும் தனது ஆற்றாமையும் நினைந்து, வாயில் நேரக் கருதிய தலைமகள், 'பரத்தையர்க்குப் பின்பும் அவன் சிறப்புச் செய்தான்' என்பது கேட்டு, பொறாளாய்க் கருத்து அழிந்து, தன்னுள்ளே சொல்லியது. 2 | | |
|
|
13 | | பரியுடை நல் மான் பொங்குஉளை அன்ன | | அடைகரை வேழம் வெண் பூப் பகரும், | | தண் துறை ஊரன் பெண்டிர், | | துஞ்சு ஊர் யாமத்தும், துயில் அறியலரே. | | வாயிலாய்ப் புக்கார்க்குத் தலைமகள், 'அவன் பெண்டிர் நள்ளென் யாமத்தும் துயிலார்; அவர் அறியாமல் அவன் வரும் திறம் யாது?' எனச் சொல்லி வாயில் மறுத்தது. 3 | | |
|
|
14 | | கொடிப் பூ வேழம் தீண்டி, அயல | | வடிக்கொள் மாஅத்து வண் தளிர் நுடங்கும் | | அணித் துறை ஊரன் மார்பே | | பனித் துயில் செய்யும் இன் சாயற்றே. | | தலைமகள் புணர்ச்சி வேட்கையைக் குறிப்பினான் உணர்ந்த தோழி, 'அவன் கொடுமை நினையாது அவன் மார்பை நினைந்து ஆற்றாயாகின்றது என்னை?' என்றாட்கு, அவன் கொடியனேஆயினும், அவன் மார்பு குளிர்ந்த துயிலைச் செய்யும் இனிய சாயலை உடைத்து ’ஆதலால் காண்’ எனச் சொல்லியது. 4 | | |
|
|
15 | | மணல் ஆடு மலிர்நிறை விரும்பிய, ஒண் தழை | | புனல் ஆடு மகளிர்க்குப் புணர் துணை உதவும் | | வேழ மூதூர் ஊரன் | | ஊரன் ஆயினும், ஊரன் அல்லன்னே. | | சேணிடைப் பிரிந்து வந்து உடன் உறைகின்ற தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாகின்றது என்று குறிப்பினான் உணர்ந்து, தலைமகள் வேறுபட்டாளாக, தோழி அதனை அறியாது, ' அவன் உடன்உறையவும் வேறுபடுகின்றது என்னை?' என்றட்கு அவள் சொல்லியது. 5 | | |
|
|
16 | | ஓங்கு பூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால் | | சிறு தொழுமகளிர் அஞ்சனம் பெய்யும் | | பூக் கஞல் ஊரனை உள்ளி, | | பூப் போல் உண்கண் பொன் போர்த்தனவே. | | வாயிலாய்ப் புகுந்தார்க்குத் தோழி, 'அவன் வரவையே நினைத்து இவள் கண்ணும் பசந்தன; இனி அவன் வந்து பெறுவது என்னை?' எனச் சொல்லி, வாயில் மறுத்தது. 6 | | |
|
|
17 | | புதல் மிசை நுடங்கும் வேழ வெண் பூ | | விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன் | | புதுவோர் மேவலன் ஆகலின், | | வறிது ஆகின்று, என் மடம் கெழு நெஞ்சே. | | தலைமகன் பரத்தையிற் பிரிந்த வழி, 'இவ்வாறு ஒழுகுதலும் ஆடவர்க்கு இயல்பு அன்றே; நீ இதற்கு நெஞ்சு அழிகின்றது என்னை?' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 7 | | |
|
|
18 | | இருஞ் சாய் அன்ன செருந்தியொடு வேழம் | | கரும்பின் அலமரும் கழனி ஊரன், | | பொருந்து மலர் அன்ன என் கண் அழ, | | பிரிந்தனன் அல்லனோ, 'பிரியலென்' என்றே? | | பரத்தையிற் பிரிந்து வந்து தெளித்துக் கூடிய தலைமகற்குப் பின் அவ் ஓழுக்கம் உளதாயவழி, அவன் வரவிடுத்த வாயில்கட்குத் தலைமகள் சொல்லியது. 8 | | |
|
|
19 | | எக்கர் மாஅத்துப் புதுப் பூம் பெருஞ் சினை, | | புணர்ந்தோர் மெய்ம் மணம் கமழும் தண் பொழில், | | வேழ வெண் பூ வெள் உளை சீக்கும் | | ஊரன் ஆகலின் கலங்கி, | 5 | மாரி மலரின் கண் பனி உகுமே. | | 'பல் நாள் அவன் சேணிடைப் பிரியவும் ஆற்றியுளையாகிய நீ சில் நாள் அவன் புறத்து ஒழுகுகின்ற இதற்கு ஆற்றாயாகின்றது என்னை?' என்ற தோழிக்கு, 'எதிர்ப்பாடு இன்றி ஓர் ஊர்க்கண்ணே உறைகையினாலே ஆற்றேனாகின்றேன்' எனத் தலைமகள் சொல்லியது. 9 | | |
|
|
20 | | அறு சில் கால அஞ்சிறைத் தும்பி | | நூற்றிதழ்த் தாமரைப் பூச் சினை சீக்கும், | | காம்பு கண்டன்ன தூம்புடை, வேழத்துத் | | துறை நணி ஊரனை உள்ளி, என் | 5 | இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மே. | | தலைமகளை வாயில் நேர்வித்தற் பொருட்டாக, 'காதலர் கொடுமை செய்தாராயினும், அவர் திறம் மறவாதொழியல் வேண்டும்' என்று முகம்புகுகின்ற தோழிக்கு, 'என் கைவளை நில்லாதாகின்றது அவரை நினைந்ததன் பயன் அன்றே; இனி அமையும்' எனத் தலைமகள் சொல்லியது. 10 | | |
|
|