111 | | அம்ம வாழி, தோழி! பாணன் | | சூழ் கழிமருங்கின் நாண் இரை கொளீஇச் | | சினைக் கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை | | பிரிந்தும் வாழ்துமோ நாமே | 5 | அருந் தவம் முயறல் ஆற்றாதேமே? | |
| 'இற்செறிப்பார்' எனக் கேட்ட தலைமகள் வரையாது வந்து ஒழுகும் தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது. 1 | | |
|
|
112 | | அம்ம வாழி, தோழி! பாசிலைச் | | செருந்தி தாய இருங் கழிச் சேர்ப்பன் | | தான் வரக் காண்குவம் நாமே; | | மறந்தோம் மன்ற, நாணுடை நெஞ்சே. | |
| களவு நீடுவழி, 'வரையலன்கொல்?' என்று அஞ்சிய தோழிக்குத் தலைமகன் வரையும் திறம் தெளிக்க, தெளிந்த தலைமகள் சொல்லியது. 2 | | |
|
|
113 | | அம்ம வாழி, தோழி! நென்னல் | | ஓங்குதிரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு, | | ஊரார், 'பெண்டு' என மொழிய, என்னை, | | அது கேட்டு, 'அன்னாய்' என்றனள், அன்னை; | 5 | பைபய 'எம்மை' என்றனென், யானே. | |
| வரையாது வந்து ஒழுகும் தலைமகன் சிறைப்புறத்து நின்று கேட்ப, 'நெருநல் இல்லத்து நிகழ்ந்தது இது' எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 3 | | |
|
|
114 | | அம்ம வாழி, தோழி! கொண்கன் | | நேரேம் ஆயினும், செல்குவம் கொல்லோ | | கடலின் நாரை இரற்றும் | | மடல்அம் பெண்ணை அவனுடை நாட்டே? | |
| இடைவிட்டு ஒழுகும் தலைமகன் வந்து சிறைப்புறத்தான் ஆனமை அறிந்த தலைமகள் அவன் கேட்குமாற்றால் தோழிக்குச் சொல்லியது. 4 | | |
|
|
115 | | அம்ம வாழி, தோழி! பல் மாண் | | நுண் மணல் அடைகரை நம்மோடு ஆடிய | | தண்ணம் துறைவன் மறைஇ, | | அன்னை அருங் கடி வந்து நின்றோனே! | |
| இற் செறிப்புண்ட பின்பும், வரைந்து கொள்ள நினையாது தலைமகன் வந்தானாக, அதனை அறிந்த தலைமகள் அவன் கேட்குமாற்றால் தோழிக்குச் சொல்லியது. 5 | | |
|
|
116 | | அம்ம வாழி, தோழி! நாம் அழ, | | நீல இருங் கழி நீலம் கூம்பும் | | மாலை வந்தன்று, மன்ற | | காலை அன்ன காலை முந்துறுத்தே. | |
| எற்பாட்டின்கண் தலைமகன் சிறைப்புறத்து நின்று கேட்ப, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 6 | | |
|
|
117 | | அம்ம வாழி, தோழி! நலனே | | இன்னது ஆகுதல் கொடிதே! புன்னை | | அணி மலர் துறைதொறும் வரிக்கும் | | மணி நீர்ச் சேர்ப்பனை மறவாதோர்க்கே. | |
| வரையாது வந்து ஒழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 7 | | |
|
|
118 | | அம்ம வாழி, தோழி! யான் இன்று, | | அறனிலாளற் கண்ட பொழுதில், | | சினவுவென் தகைக்குவென் சென்றனென் | | பின் நினைந்து இரங்கிப் பெயர்தந்தேனே. | |
| சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி வாயில் மறுத்த தலைமகள், பின்பு தலைமகன் வந்துழி, நிகழ்ந்ததனை அவட்குக் கூறியதூஉம் ஆம். 8 | | |
|
|
119 | | அம்ம வாழி, தோழி! நன்றும் | | எய்யாமையின் ஏதில பற்றி, | | அன்பு இலன் மன்ற பெரிதே | | மென் புலக் கொண்கன் வாராதோனே! | |
| 'வரைதற்கு வேண்டுவன முயல்வேம்' எனச் சொல்லி வரையாது செலுத்துகின்ற தலைமகன் சிறைப்புறத்தான் ஆனமை அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 9 | | |
|
|
120 | | அம்ம வாழி, தோழி! நலம் மிக | | நல்லஆயின, அளிய மென் தோளே | | மல்லல் இருங் கழி மல்கும் | | மெல்லம் புலம்பன் வந்தமாறே. | |
| வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்து சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 10 | | |
|
|