121 | | கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே? | | முண்டகக் கோதை நனைய, | | தெண் திரைப் பௌவம் பாய்ந்து நின்றோளே! | |
| பரத்தை தலைமகற்குச் சொல்லியது; 'பெதும்பைப் பருவத்தாள் ஒரு பரத்தையோடு கூடி மறைந்து ஒழுகாநின்றான்' என்பது அறிந்து தலைவி புலந்துழி, 'இத் தவறு என் மாட்டு இலை; நீ இப் புலவியை நீக்க வேண்டும்' என்று தோழிக்குத் தலைமகன் கூற, புலவ | | |
|
|
122 | | கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே? | | ஒள் இழை உயர் மணல் வீழ்ந்தென, | |
| வெள்ளாங் குருகை வினவுவோளே! 2 | | |
|
|
123 | | கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே? | | ஒண் நுதல் ஆயம் ஆர்ப்ப, | |
| தண்ணென் பெருல் கடல் திரை பாய்வோளே! 3 | | |
|
|
124 | | கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே? | | வண்டற் பாவை வௌவலின், | |
| நுண் பொடி அளைஇக் கடல் தூர்ப்போளே! 4 | | |
|
|
125 | | கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே? | | தெண் திரை பாவை வௌவ, | |
| உண்கண் சிவப்ப அழுது நின்றோளே! 5 | | |
|
|
126 | | கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே? | | உண்கண் வண்டினம் மொய்ப்ப, | |
| தெண் கடல் பெருந் திரை மூழ்குவோளே! 6 | | |
|
|
127 | | கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே? | | தும்பை மாலை இள முலை | |
| நுண் பூண் ஆகம் விலங்குவோளே! 7 | | |
|
|
128 | | கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே? | | உறாஅ வறு முலை மடாஅ, | |
| உண்ணாப் பாவையை ஊட்டுவோளே! 8 | | |
|
|
129 | | ,,,,,,,,,,,,,,,,,,,,,, | | ,,,,,,,,,,,,,,,,,,,,,, | | ,,,,,,,,,,,,,,,,,,,,,, | |
| (இந்தப் பாடல் கிடைக்கப்பெறவில்லை) 9 | | |
|
|
130 | | ,,,,,,,,,,,,,,,,,,,,,, | | ,,,,,,,,,,,,,,,,,,,,,, | | ,,,,,,,,,,,,,,,,,,,,,, | |
| (இந்தப் பாடல் கிடைக்கப்பெறவில்லை) 10 | | |
|
|