181 | | நெய்தல் உண்கண், நேர் இறைப் பணைத் தோள் | | பொய்தல் ஆடிய பொய்யா மகளிர் | | குப்பை வெண் மணல் குரவை நிறூஉம் | | துறை கெழு கொண்கன் நல்கின், | 5 | உறைவு இனிது, அம்ம! இவ் அழுங்கல் ஊரே. | |
| 'இக் களவொழுக்கம் நெடிது சொல்லின், இவ் ஊர்க்கண் அலர் பிறக்கும்' என்று அஞ்சியிருந்த தலைவி, 'தலைமகன் வரைந்து கொள்ளத் துணிந்தான்' என்று கூறிய தோழிக்குச் சொல்லியது. 1 | | |
|
|
182 | | நெய்தல் நறு மலர் செருந்தியொடு விரைஇக் | | கை புனை நறுந் தார் கமழும் மார்பன் | | அருந் திறல் கடவுள் அல்லன் | | பெருந் துறைக் கண்டு, இவள் அணங்கியோனே. | |
| தலைமகள் மெலிவுகண்டு, 'தெய்வத்தால் ஆயிற்று' எனத் தமர் நினைந்துழி, தோழி அறத்தொடு நின்றது. 2 | | |
|
|
183 | | [கணங்கொள் அருவிக் கான் கெழு நாடன் | | குறும்பொறை நாடன், நல்வயல் ஊரன்,] | | தண் கடல் சேர்ப்பன் பிரிந்தென, பண்டையின் | | கடும் பகல் வருதி கையறு மாலை! | 5 | கொடுங்கழி நெய்தலும் கூம்பக் | | காலை வரினும், களைஞரோ இலரே. | |
| வரைவிடைவைத்துப் பிரிந்துழி ஆற்றாளாகிய தலைமகள் மாலைக்குச் சொல்லியது. (முதலிரண்டு அடிகள் சில பிரதிகளில் காணப்படுகின்றன.) 3 | | |
|
|
184 | | நெய்தல் இருங் கழி நெய்தல் நீக்கி | | மீன் உண் குருகினம் கானல் அல்கும் | | கடல் அணிந்தன்று, அவர் ஊரே; | | கடலினும் பெரிது, எமக்கு அவருடை நட்பே. | |
| வாயில் வேண்டி வந்தார் தலைமகன் அன்புடைமை கூறியவழி, வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது. 4 | | |
|
|
185 | | அலங்குஇதழ் நெய்தல் கொற்கை முன்துறை | | இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய், | | அரம் போழ் அவ் வளைக் குறுமகள் | | நரம்பு ஆர்த்தன்ன தீம் கிளவியளே. | |
| 'ஆயமகளிருள் நின்னால் நயக்கப்பட்டாள் யாவள்?' என வினவிய தோழிக்குத் தலைமகன் சொல்லியது. 5 | | |
|
|
186 | | நாரை நல் இனம் கடுப்ப, மகளிர் | | நீர் வார் கூந்தல் உளரும் துறைவ! | | 'பொங்குகழி நெய்தல் உறைப்ப, இத் துறைப் | | பல்கால் வரூஉம் தேர்' என, | 5 | 'செல்லாதீமோ' என்றனள், யாயே. | |
| பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவுகடாயது. 6 | | |
|
|
187 | | நொதுமலாளர் கொள்ளார் இவையே; | | எம்மொடு வந்து கடல் ஆடு மகளிரும் | | நெய்தல்அம் பகைத்தழைப் பாவை புனையார்; | | உடலகம் கொள்வோர் இன்மையின், | 5 | தொடலைக்கு உற்ற சில பூவினரே. | |
|
|
|
188 | | இருங் கழிச் சேயிறா இனப் புள் ஆரும் | | கொற்கைக் கோமான் கொற்கைஅம் பெருந் துறை | | வைகறை மலரும் நெய்தல் போலத் | | தகை பெரிது உடைய, காதலி கண்ணே! | |
| விருந்து வாயிலாகப் புகுந்த தலைமகன் தலைவி இல்வாழ்க்கைச் சிறப்புக் கண்டு, மகிழ்ந்து சொல்லியது. 8 | | |
|
|
189 | | புன்னை நுண் தாது உறைத்தரு நெய்தல் | | பொன்படு மணியின் பொற்பத் தோன்றும் | | மெல்லம் புலம்பன் வந்தென, | | நல்லஆயின தோழி! என் கண்ணே. | |
| வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வரைவான் வந்துழிக் கண்டு உவகையோடு வந்த தோழி, 'நின் கண் மலர்ச்சிக்குக் காரணம் என்?' என்று வினாவிய தலைவிக்குத் சொல்லியது. 9 | | |
|
|
190 | | தண் நறு நெய்தல் தளை அவிழ் வான் பூ | | வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும் | | மெல்லம் புலம்பன் மன்ற எம் | | பல் இதழ் உண்கண் பனி செய்தோனே. | | தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10 | | |
|
|