201 | | அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! என்னை | | தானும் மலைந்தான்; எமக்கும் தழை ஆயின; | | பொன் வீ மணி அரும்பினவே | | என்ன மரம்கொல், அவர் சாரலவ்வே! | |
| நொதுமலர் வரைவின்கண் செவிலி கேட்குமாற்றால் தலைமகள் தோழிக்கு அறத்தொடுநிலை குறித்து த்தது. 1 | | |
|
|
202 | | அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்ப் | | பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும் | | குடுமித் தலைய மன்ற | | நெடு மலை நாடன் ஊர்ந்த மாவே. | |
| தலைமகன் வரைதல் வேண்டித் தானே வருகின்றமை கண்ட தோழி உவந்த உள்ளத்தளாய்த் தலைமகட்குக் காட்டிச் சொல்லியது. 2 | | |
|
|
203 | | அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைத் | | தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு | | உவலைக் கூவல் கீழ | | மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே. | |
| உடன்போய் மீண்ட தலைமகள், 'நீ சென்ற நாட்டு நீர் இனிய அல்ல; நீ எங்ஙனம் நுகர்ந்தாய்?' எனக் கேட்ட தோழிக்குக் கூறியது. 3 | | |
|
|
204 | | அன்னாய், வாழி, வேண்டு, அன்னை! அஃது எவன்கொல்? | | வரையர மகளிரின் நிரையுடன் குழீஇ, | | பெயர்வுழிப் பெயர்வுழித் தவிராது நோக்கி, | | நல்லள் நல்லள் என்ப; | 5 | தீயேன் தில்ல, மலை கிழவோற்கே! | |
| வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4 | | |
|
|
205 | | அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! என் தோழி | | நனி நாண் உடையள்; நின்னும் அஞ்சும்; | | ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன் | | மலர்ந்த மார்பின் பாயல் | 5 | தவ நனி வெய்யள்; நோகோ; யானே. | |
| நொதுமலர் வரைவு வேண்டி விட்டுழித் தலைமகட்கு உளதாகிய வருத்தம் நோக்கி, 'இவள் இவ்வாறு ஆதற்குக் காரணம் என்னை?' என்று வினவிய செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. 5 | | |
|
|
206 | | அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! உவக்காண் | | மாரிக் குன்றத்துக் காப்பாள் அன்னன்; | | தூவலின் நனைந்த தொடலை ஒள் வாள், | | பாசி சூழ்ந்த பெருங் கழல், | 5 | தண் பனி வைகிய வரிக் கச்சினனே! | |
| இரவுக்குறிக்கண் தலைமகன் வந்து குறியிடத்து நின்றமை அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. 6 | | |
|
|
207 | | அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நன்றும் | | உணங்கல கொல்லோ, நின் தினையே? உவக்காண் | | நிணம் பொதி வழுக்கின் தோன்றும், | | மழை தலைவைத்து, அவர் மணி நெடுங் குன்றே. | |
| 'மழையின்மையால் தினை உணங்கும்; விளையமாட்டா; புனங்காப்பச் சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று' என வெறுத்திருந்த தலைமகட்குத் தோழி சொல்லியது. 7 | | |
|
|
208 | | அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! கானவர் | | கிழங்கு அகழ் நெடுங் குழி மல்க வேங்கைப் | | பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு, | | மணி நிற மால் வரை மறைதொறு, இவள் | 5 | அறை மலர் நெடுங் கண் ஆர்ந்தன பனியே. | |
| செவிலிக்கு அறத்தொடு நின்ற தோழி, அவளால் வரைவு மாட்சிமைப் பட்ட பின்பு, 'இவள் இவ்வாறு பட்ட வருத்தம் எல்லாம் நின்னின் தீர்ந்தது' என்பது குறிப்பின் தோன்ற அவட்குச் சொல்லியது. 8 | | |
|
|
209 | | அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நீ மற்று | | யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின், | | கொண்டல் அவரைப் பூவின் அன்ன | | வெண் தலை மா மழை சூடி, | 5 | தோன்றல் ஆனாது, அவர் மணி நெடுங் குன்றே. | |
| வரைவிடை வைத்துப்பிரிவின்கண் அவனை நினைவு விடாது ஆற்றாளாகியவழி, 'சிறிது மறந்து ஆற்ற வேண்டும்' என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 9 | | |
|
|
210 | | அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைப் | | புலவுச் சேர் துறுகல் ஏறி, அவர் நாட்டுப் | | பூக் கெழு குன்றம் நோக்கி நின்று, | | மணி புரை வயங்கு இழை நிலைபெறத் | 5 | தணிதற்கும் உரித்து, அவள் உற்ற நோயே. | |
| காப்பு மிகுதிக்கண் தலைமகள் மெலிவுகண்டு, 'தெய்வத்தினான் ஆயிற்று' என்று வெறியெடுப்புழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10 | | |
|
|