| 241 | | நம் உறு துயரம் நோக்கி, அன்னை | | வேலன் தந்தனள் ஆயின், அவ் வேலன் | | வெறி கமழ் நாடன் கேண்மை | | அறியுமோ தில்ல? செறி எயிற்றோயே! | |
| | இற்செறித்தவழித் தலைமகட்கு எய்திய மெலிவு கண்டு, 'இஃது எற்றினான் ஆயிற்று?' என்று வேலனைக் கேட்பத் துணிந்துழி, அறத்தொடுநிலை துணிந்த தோழி செவிலி கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லியது. 1 | | |
|
|
|
| 242 | | அறியாமையின், 'வெறி' என மயங்கி, | | அன்னையும் அருந் துயர் உழந்தனள்; அதனால், | | எய்யாது விடுதலோ கொடிதே நிரை இதழ் | | ஆய் மலர் உண்கண் பசப்ப, | 5 | சேய் மலை நாடன் செய்த நோயே. | |
| | தலைமகள் அறத்தொடுநிலை நயப்ப வேண்டித் தோழி அவட்குச் சொல்லியது. 2 | | |
|
|
|
| 243 | | கறி வளர் சிலம்பிற் கடவுள் பேணி, | | அறியா வேலன், 'வெறி' எனக் கூறும்; | | அது மனம் கொள்குவை, அனை! இவள் | | புது மலர் மழைக் கண் புலம்பிய நோய்க்கே. | |
| | தாயுழை அறியாமை கூறித் தோழி வெறி விலக்கியது. 3 | | |
|
|
|
| 244 | | அம்ம வாழி, தோழி! பல் மலர் | | நறுந் தண் சோலை நாடு கெழு நெடுந்தகை | | குன்றம் பாடான் ஆயின், | | என் பயம் செய்யுமோ வேலற்கு வெறியே? | |
| | வெறியாடல் துணிந்துழி, விலக்கலுறுந் தோழி செவிலி கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லியது. 4 | | |
|
|
|
| 245 | | பொய்யா மரபின் ஊர் முது வேலன் | | கழங்கு மெய்ப்படுத்து, கன்னம் தூக்கி, | | 'முருகு' என மொழியும்ஆயின், | | கெழுதகைகொல் இவள் அணங்கியோற்கே? | |
| | தலைமகன் சிறைப்புறத்தானாக, வெறி அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. 5 | | |
|
|
|
| 246 | | வெறி செறித்தனனே, வேலன் கறிய | | கல் முகை வயப் புலி கழங்கு மெய்ப்படூஉ, | | .................................................................................................................. | | மெய்ம்மை அன்ன பெண்பாற் புணர்ந்து, | 5 | மன்றில் பையுள் தீரும் | | குன்ற நாடன் உறீஇய நோயே. | |
| | வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாய் நின்றுழி, அவன் கேட்குமாற்றால் வெறி நிகழாநின்றமை தோழி தலைமகட்குச் சொல்லியது. 6 | | |
|
|
|
| 247 | | அன்னை தந்தது ஆகுவது அறிவென்: | | பொன் நகர் வரைப்பில் கன்னம் தூக்கி, | | 'முருகு' என மொழியும் ஆயின், | | அரு வரை நாடன் பெயர்கொலோ, அதுவே? | |
| | வெறி விலக்கலுறும் தோழி தமர் கேட்பத் தலைமகளை வினவுவாளாய்ச் சொல்லியது. 7 | | |
|
|
|
| 248 | | பெய்ம்மணல் முற்றம் கவின் பெற இயற்றி, | | மலை வான் கொண்ட சினைஇய வேலன் | | கழங்கினான் அறிகுவது என்றால், | | நன்றால்அம்ம, நின்ற இவள் நலனே! | |
| | 'தலைமகள் வேறுபாடு கழங்கினால் தெரியும்' என்று வேலன் கூறியவழி, அதனைப் 'பொய்' என இகழ்ந்த தோழி வெறி விலக்கிச் செவிலிக்கு அறத்தொடு நின்றது. 8 | | |
|
|
|
| 249 | | பெய்ம்மணல் வரைப்பில் கழங்கு படுத்து, அன்னைக்கு, | | 'முருகு' என மொழியும் வேலன்; மற்று அவன் | | வாழிய இலங்கும் அருவிச் | | சூர் மலை நாடனை அறியாதோனே! | |
| | வேலன் கூறிய மாற்றத்தை மெய்யெனக் கொண்ட தாய் கேட்பத் தலைமகட்குத் தோழி கூறியது. 9 | | |
|
|
|
| 250 | | பொய் படுபு அறியாக் கழங்கே! மெய்யே | | மணி வரைக் கட்சி மட மயில் ஆலும் நம் | | மலர்ந்த வள்ளிஅம் கானங் கிழவோன்; | | ஆண்தகை விறல் வேள் அல்லன் இவள் | 5 | பூண் தாங்கு இளமுலை அணங்கியோனே. | |
| | 'தலைமகட்கு வந்த நோய் முருகனால் வந்தமை இக் கழங்கு கூறிற்று' என்று வேலன் சொன்னான் என்பது கேட்ட தோழி அக் கழங்கிற்கு ப்பாளாய், செவிலி கேட்குமாற்றால் அறத்தொடுநிலை குறித்துச் சொல்லியது. 10 | | |
|
|
|