241 | | நம் உறு துயரம் நோக்கி, அன்னை | | வேலன் தந்தனள் ஆயின், அவ் வேலன் | | வெறி கமழ் நாடன் கேண்மை | | அறியுமோ தில்ல? செறி எயிற்றோயே! | |
| இற்செறித்தவழித் தலைமகட்கு எய்திய மெலிவு கண்டு, 'இஃது எற்றினான் ஆயிற்று?' என்று வேலனைக் கேட்பத் துணிந்துழி, அறத்தொடுநிலை துணிந்த தோழி செவிலி கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லியது. 1 | | |
|
|
243 | | கறி வளர் சிலம்பிற் கடவுள் பேணி, | | அறியா வேலன், 'வெறி' எனக் கூறும்; | | அது மனம் கொள்குவை, அனை! இவள் | | புது மலர் மழைக் கண் புலம்பிய நோய்க்கே. | |
| தாயுழை அறியாமை கூறித் தோழி வெறி விலக்கியது. 3 | | |
|
|
245 | | பொய்யா மரபின் ஊர் முது வேலன் | | கழங்கு மெய்ப்படுத்து, கன்னம் தூக்கி, | | 'முருகு' என மொழியும்ஆயின், | | கெழுதகைகொல் இவள் அணங்கியோற்கே? | |
| தலைமகன் சிறைப்புறத்தானாக, வெறி அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. 5 | | |
|
|
248 | | பெய்ம்மணல் முற்றம் கவின் பெற இயற்றி, | | மலை வான் கொண்ட சினைஇய வேலன் | | கழங்கினான் அறிகுவது என்றால், | | நன்றால்அம்ம, நின்ற இவள் நலனே! | |
| 'தலைமகள் வேறுபாடு கழங்கினால் தெரியும்' என்று வேலன் கூறியவழி, அதனைப் 'பொய்' என இகழ்ந்த தோழி வெறி விலக்கிச் செவிலிக்கு அறத்தொடு நின்றது. 8 | | |
|
|
250 | | பொய் படுபு அறியாக் கழங்கே! மெய்யே | | மணி வரைக் கட்சி மட மயில் ஆலும் நம் | | மலர்ந்த வள்ளிஅம் கானங் கிழவோன்; | | ஆண்தகை விறல் வேள் அல்லன் இவள் | 5 | பூண் தாங்கு இளமுலை அணங்கியோனே. | |
| 'தலைமகட்கு வந்த நோய் முருகனால் வந்தமை இக் கழங்கு கூறிற்று' என்று வேலன் சொன்னான் என்பது கேட்ட தோழி அக் கழங்கிற்கு ப்பாளாய், செவிலி கேட்குமாற்றால் அறத்தொடுநிலை குறித்துச் சொல்லியது. 10 | | |
|
|