261 | | மென் தினை மேய்ந்த தறுகண் பன்றி | | வன் கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன் | | எந்தை அறிதல் அஞ்சிக்கொல்? | | அதுவே மன்ற வாராமையே. | |
| அல்லகுறிப்பட்டுத் தலைமகன் நீங்கினமை அறியாதாள் போன்று தோழி, பிற்றை ஞான்று அவன் சிறைப்புறத்தானாய் நிற்ப, தலைமகட்குச் சொல்லியது. 1 | | |
|
|
262 | | சிறு தினை மேய்ந்த தறுகண் பன்றி | | துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும் | | இலங்குமலை நாடன் வரூஉம்; | | மருந்தும் அறியும்கொல் தோழி! அவன் விருப்பே? | |
| 'வரைந்து கொள்ள நினைக்கிலன்' என்று வேறுபட்ட தலைமகள், 'அவன் நின்மேல் விருப்பமுடையன்; நீ நோகின்றது என்னை?' என்ற தோழிக்குச் சொல்லியது. 2 | | |
|
|
263 | | நன் பொன் அன்ன புனிறு தீர் ஏனல் | | கட்டளை அன்ன கேழல் மாந்தும் | | குன்று கெழு நாடன் தானும் | | வந்தனன்; வந்தன்று தோழி! என் நலனே! | |
| வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன், மீண்டமை அறிந்த தலைமகள், 'நீ தொலைந்த நலம் இன்று எய்திய காரணம் என்னை?' என்ற தோழிக்குச் சொல்லியது. 3 | | |
|
|
264 | | இளம் பிறை அன்ன கோட்ட கேழல் | | களங்கனி அன்ன பெண்பாற் புணரும் | | அயம் திகழ் சிலம்ப! கண்டிகும் | | பயந்தன மாதோ, நீ நயந்தோள் கண்ணே! | |
| வரையாது வந்து ஒழுகும் தலைமகனைப் பகற்குறிக்கண்ணே எதிர்ப்பட்டுத் தோழி வரைவு கடாயது. 4 | | |
|
|
265 | | புலி கொல் பெண்பால் பூ வரிக் குருளை | | வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும் | | குன்று கெழு நாடன் மறந்தனன் | | பொன்போல் புதல்வனோடு என் நீத்தோனே. | |
| பரத்தை இடத்தானாக ஒழுகுகின்ற தலைமகன் விடுத்த வாயில்மாக்கட்குத் தலைமகள் சொல்லியது. 5 | | |
|
|
266 | | சிறு கண் பன்றிப் பெருஞ் சின ஒருத்தலொடு | | குறுக் கை இரும் புலி பொரூஉம் நாட! | | நனி நாண் உடையை மன்ற | | பனிப் பயந்தன, நீ நயந்தோள் கண்ணே! | |
| நொதுமலர் வரைவு பிறந்துழி, தலைமகட்கு உளதாகிய வேறுபாடு தோழி கூறி, தலைமகனை வரைவு கடாயது. 6 | | |
|
|
267 | | சிறு கண் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல் | | துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி, | | ஐவனம் கவரும் குன்ற நாடன் | | வண்டு படு கூந்தலைப் பேணி, | 5 | பண்பு இல சொல்லும், தேறுதல் செத்தே. | |
| 'தலைமகளைத் தலைமகன் வரைவல்' எனத் தெளித்தான் என்று அவள் கூறக் கேட்ட தோழி, அவன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. 7 | | |
|
|
268 | | தாஅய் இழந்த தழு வரிக் குருளையொடு | | வள மலைச் சிறு தினை உணீஇ, கானவர் | | வரை ஓங்கு உயர் சிமைக் கேழல் உறங்கும் | | நல் மலை நாடன் பிரிதல் | 5 | என் பயக்குமோ நம் விட்டுத் துறந்தே? | |
| 'அவன் குறிப்பு இருந்தவாற்றால் நம்மைப் பிரிந்து வந்தல்லது வரைய மாட்டான் போன்று இருந்தது' எனத் தலைமகள் கூறக்கேட்ட தோழி, அவட்குத் தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. 8 | | |
|
|
269 | | கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை | | விளைந்த செறுவின் தோன்றும் நாடன் | | வாராது அவண் உறை நீடின் நேர் வளை | | இணை ஈர் ஓதி! நீ அழ | 5 | துணை நனி இழக்குவென், மடமையானே. | |
| குறை நயப்பக் கூறி தலைமகளைக் கூட்டிய தோழி, அவன் இடையிட்டு வந்து சிறைப்புறத்து நின்றுழி, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. 9 | | |
|
|
270 | | கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில் | | தலை விளை கானவர் கொய்தனர் பெயரும் | | புல்லென் குன்றத்துப் புலம்பு கொள் நெடு வரை | | காணினும் கலிழும் நோய் செத்து, | 5 | தாம் வந்தனர், நம் காதலோரே. | |
| வரைவு காரணமாக நெட்டிடை கழிந்து, பொருள்வயிற் போகிய தலைமகன் வந்தமை அறிந்த தோழி, உவந்த உள்ளத்தளாய், தலைமகட்குச் சொல்லியது. 10 | | |
|
|