351 | | அத்தப் பலவின் வெயில் தின் சிறு காய், | | அருஞ் சுரம் செல்வோர், அருந்தினர் கழியும் | | காடு பின் ஒழிய வந்தனர்; தீர்க, இனி | | பல் இதழ் உண்கண் மடந்தை! நின் | 5 | நல் எழில் அல்குல் வாடிய நிலையே. | |
| பிரிந்த தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. 1 |
|
|
|
352 | | விழுத் தொடை மறவர் வில் இடத் தொலைந்தோர் | | எழுத்துடை நடுகல் அன்ன விழுப் பிணர்ப் | | பெருங் கை யானை இருஞ் சினம் உறைக்கும் | | வெஞ் சுரம் 'அரிய' என்னார், | 5 | வந்தனர் தோழி! நம் காதலோரே! | |
|
|
|
353 | | எரிக் கொடி கவைஇய செவ் வரை போலச் | | சுடர்ப் பூண் விளங்கும் ஏந்து எழில் அகலம் | | நீ இனிது முயங்க, வந்தனர் | | மா இருஞ் சோலை மலை இறந்தோரே. | |
|
|
|
354 | | ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை | | மறியுடை மான் பிணை கொள்ளாது கழியும் | | அரிய சுரன் வந்தனரே | | தெரிஇழை அரிவை! நின் பண்பு தர விரைந்தே. | |
|
|
|
355 | | திருந்துஇழை அரிவை! நின் நலம் உள்ளி, | | 'அருஞ் செயல் பொருள்பிணி பெருந் திரு உறுக!' எனச் | | சொல்லாது பெயர் தந்தேனே பல் பொறிச் | | சிறு கண் யானை திரிதரும் | 5 | நெறி விலங்கு அதர கானத்தானே. | |
| நினைந்த எல்லையளவும் பொருள் முற்றி நில்லாது, பெற்ற பொருள் கொண்டு, தலைவியை நினைந்து, மீண்ட தலைமகன் அவட்குச் சொல்லியது. 5 |
|
|
|
356 | | உள்ளுதற்கு இனியமன்ற செல்வர் | | யானை பிணித்த பொன் புனை கயிற்றின், | | ஒள் எரி மேய்ந்த சுரத்திடை | | உள்ளம் வாங்க, தந்த நின் குணனே. | |
| வினை முற்றி மீண்டு வந்த தலைமகன் தலைவிக்கு அவள் குணம் புகழ்ந்து கூறியது. 6 |
|
|
|
357 | | குரவம் மலர, மரவம் பூப்ப, | | சுரன் அணி கொண்ட கானம் காணூஉ, | | 'அழுங்குக, செய்பொருள் செலவு!' என விரும்பி, நின் | | அம் கலிழ் மாமை கவின | 5 | வந்தனர் தோழி! நம் காதலோரே. | |
| பொருள்வயிற் பிரிந்து ஆண்டு உறைகின்ற தலைமகன் குறித்த பருவ வரவு கண்டு, கடிதின் மீண்டு வந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது. 7 |
|
|
|
358 | | கோடு உயர் பல் மலை இறந்தனர் ஆயினும், | | நீட விடுமோ மற்றே நீடு நினைந்து, | | துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி, | | உடைத்து எழு வெள்ளம் ஆகிய கண்ணே? | |
| தலைமகள் ஆற்றாமை கண்டு பிரிந்த தலைமகன் வந்தனனாகத் தோழி சொல்லியது. 8 |
|
|
|
359 | | அரும் பொருள் வேட்கையம் ஆகி, நிற் துறந்து, | | பெருங் கல் அதரிடைப் பிரிந்த காலைத் | | தவ நனி நெடிய ஆயின; இனியே, | | அணியிழை உள்ளி யாம் வருதலின் | 5 | நணிய ஆயின சுரத்திடை ஆறே. | |
| மீண்டு வந்த தலைமகன் அவளைப் பிரிகின்ற காலத்துச் சுரத்துச் சேய்மையும், வருகின்ற காலத்து அதன் அணிமையும், கூறியது. 9 |
|
|
|
360 | | எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை | | அரிய ஆயினும், எளிய அன்றே | | அவவு உறு நெஞ்சம் கவவு நனி விரும்பி, | | கடு மான் திண் தேர் கடைஇ, | 5 | நெடு மான் நோக்கி! நின் உள்ளி யாம் வரவே! | |
| வினைமுற்றி மீண்டு வந்த தலைமகன், 'சுரத்து அருமை நோக்காது வந்தவாறு என்னை?' என வினவிய தலைமகட்குச் சொல்லியது. 10 |
|
|
|