451 | | கார் செய் காலையொடு கையறப் பிரிந்தோர் | | தேர் தரு விருந்தின் தவிர்குதல் யாவது? | | மாற்று அருந் தானை நோக்கி, | | ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே! | |
| வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் குறித்த பருவம் நினைந்து ஆற்றி இருந்த தலைமகள், அப் பருவ வரவின்கண் பாசறையினின்றும் வந்தார் அரசன் செய்தி கூறக் கேட்டு, ஆற்றாளாய்ச் சொல்லியது. 1 | | |
|
|
452 | | வறந்த ஞாலம் தெளிர்ப்ப வீசிக் | | கறங்கு குரல் எழிலி கார் செய்தன்றே; | | பகை வெங் காதலர் திறை தரு முயற்சி | | மென் தோள் ஆய்கவின் மறைய, | 5 | பொன் புனை பீரத்து அலர் செய்தன்றே. | |
| குறித்த பருவத்து வாராது தலைமகன் பகைமேல் முயல்கின்ற முயற்சி கேட்ட தலைமகள் கூறியது. 2 | | |
|
|
453 | | அவல்தொறும் தேரை தெவிட்ட, மிசைதொறும் | | வெங் குரல் புள்ளினம் ஒலிப்ப, உதுக்காண், | | கார் தொடங்கின்றால் காலை; அதனால், | | நீர் தொடங்கினவால் நெடுங் கண்; அவர் | 5 | தேர் தொடங்கு இன்றால் நம்வயினானே. | |
| பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 3 | | |
|
|
454 | | தளவின் பைங் கொடி தழீஇ, பையென | | நிலவின் அன்ன நேர் அரும்பு பேணி, | | கார் நயந்து எய்தும், முல்லை; அவர் | | தேர் நயந்து உறையும், என் மாமைக் கவினே. | |
| பருவ வரவின்கண் தலைமகள் ஆற்றாளாய்த் தோழிக்குச் சொல்லியது. 4 | | |
|
|
455 | | அரசு பகை தணிய, முரசு படச் சினைஇ, | | ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றே: | | அளியவோ அளிய தாமே ஒளி பசந்து, | | மின் இழை ஞெகிழச் சாஅய், | 5 | தொல் நலம் இழந்த என் தட மென் தோளே! | |
| ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 5 | | |
|
|
456 | | உள்ளார்கொல்லோ தோழி! வெள் இதழ்ப் | | பகல் மதி உருவின் பகன்றை மா மலர் | | வெண் கொடி ஈங்கைப் பைம் புதல் அணியும் | | அரும் பனி அளைஇய கூதிர் | 5 | ஒருங்கு இவண் உறைதல், தெளித்து அகன்றோரே? | |
| குறித்த பருவம் வரவும் தலைமகன் வந்திலனாக ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 6 | | |
|
|
457 | | பெய் பனி நலிய, உய்தல் செல்லாது | | குருகினம் நரலும் பிரிவு அருங் காலை, | | துறந்து அமைகல்லார், காதலர்; | | மறந்து அமைகல்லாது, என் மடம் கெழு நெஞ்சே. | |
| பருவ வரவின் கண் ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 7 | | |
|
|
458 | | துணர்க் காய்க் கொன்றை குழற் பழம் ஊழ்த்தன; | | அதிர் பெயற்கு எதிரிய சிதர் கொள் தண் மலர் | | பாணர் பெருமகன் பிரிந்தென, | | மாண் நலம் இழந்த என் கண் போன்றனவே! | |
| பருவங் குறித்துப் பிரிந்த தலைமகன் வரவு பார்த்திருந்த தலைமகள் பருவ முதிர்ச்சி கூறி, ஆற்றாளாய் த்தது. 8 | | |
|
|
459 | | மெல் இறைப் பணைத் தோள் பசலை தீர, | | புல்லவும் இயைவது கொல்லோ புல்லார் | | ஆர் அரண் கடந்த சீர் கெழு தானை | | வெல் போர் வேந்தனொடு சென்ற | 5 | நல் வயல் ஊரன் நறுந் தண் மார்பே? | |
| 'வேந்தன் வினை முற்றினான்; நின் காதலர் கடுக வருவர்' எனக் கேட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 9 | | |
|
|
460 | | பெருஞ் சின வேந்தனும் பாசறை முனியான்; | | இருங் கலி வெற்பன் தூதும் தோன்றா; | | ததை இலை வாழை முழுமுதல் அசைய, | | இன்னா வாடையும் அலைக்கும்; | 5 | என் ஆகுவென்கொல், அளியென் யானே? | |
| வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகனைப் பருவ முதிர்ச்சியினும் வரக் காணாது, தலைமகள் சொல்லியது. 10 | | |
|
|