471 | | எல் வளை நெகிழ, மேனி வாட, | | பல் இதழ் உண்கண் பனி அலைக் கலங்க, | | துறந்தோன் மன்ற, மறம் கெழு குருசில்; | | அது மற்று உணர்ந்தனை போலாய் | 5 | இன்னும் வருதி; என் அவர் தகவே? | |
| பருவ வரவின்கண் தூதாகி வந்த பாணன் கூறிய வழி, தோழி சொல்லியது. 1 | | |
|
|
472 | | கை வல் சீறியாழ்ப் பாண! நுமரே | | செய்த பருவம் வந்து நின்றதுவே; | | எம்மின் உணரார்ஆயினும், தம்வயின் | | பொய் படு கிளவி நாணலும் | 5 | எய்யார் ஆகுதல், நோகோ யானே? | |
| குறித்த பருவம் வரவும் தலைமகன் வாரானாகியவழி, தூதாய் வந்த பாணற்குத் தோழி கூறியது. 2 | | |
|
|
473 | | பலர் புகழ் சிறப்பின் நும் குருசில் உள்ளிச் | | செலவு நீ நயந்தனைஆயின், மன்ற | | இன்னா அரும் படர் எம்வயின் செய்த | | பொய் வலாளர் போல | 5 | கை வல் பாண! எம் மறவாதீமே. | |
| 'தலைமகன் பிரிந்த நாட்டில் செல்வேம்' என்ற அவன் பாணற்குத் தலைமகள் சொல்லியது. 3 | | |
|
|
474 | | மை அறு சுடர் நுதல் விளங்க, கறுத்தோர் | | செய் அரண் சிதைத்த செரு மிகு தானையொடு | | கதழ் பரி நெடுந் தேர் அதர் படக் கடைஇச் | | சென்றவர்த் தருகுவல் என்னும்; | 5 | நன்றால் அம்ம, பாணனது அறிவே! | |
| பிரிவின்கண் ஆற்றாமை கண்டு, 'தூதாகிச் சென்று அவனைக் கொணர்வல்' என்ற பாணன் கேட்பத் தலைமகள் கூறியது. 4 | | |
|
|
475 | | தொடி நிலை கலங்க வாடிய தோளும் | | வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கி, | | பெரிது புலம்பினனே, சீறியாழ்ப் பாணன்; | | எம் வெங் காதலொடு பிரிந்தோர் | 5 | தம்மோன் போலான்; பேர் அன்பினனே. | |
| பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தலைமகனுழை நின்று வந்தார் கேட்ப, தன் மெலிவு கண்டு இரங்கிய பாணனைத் தோழிக்கு மகிழ்ந்து சொல்லியது. 5 | | |
|
|
476 | | கருவி வானம் கார் சிறந்து ஆர்ப்ப, | | பருவம் செய்தன பைங் கொடி முல்லை; | | பல் ஆன் கோவலர் படலைக் கூட்டும் | | அன்பு இல் மாலையும் உடைத்தோ | 5 | அன்பு இல் பாண! அவர் சென்ற நாடே? | |
| 'பிரிவாற்றாமை அவற்கும் உளதன்றே; நீ வேறுபடுகின்றது என்னை?' என்ற பாணற்குத் தலைமகள் கூறியது. 6 | | |
|
|
477 | | பனி மலர் நெடுங் கண் பசலை பாய, | | துனி மலி துயரமொடு அரும் படர் உழப்போள் | | கையறு நெஞ்சிற்கு உயவுத் துணை ஆக, | | சிறு வரைத் தங்குவைஆயின், | 5 | காண்குவை மன்னால் பாண! எம் தேரே. | |
| தலைமகள்மாட்டுப் பாணனைத் தூதாக விடுத்த தலைமகன் கூறியது. 7 | | |
|
|
478 | | 'நீடினம்' என்று கொடுமை தூற்றி, | | வாடிய நுதலள் ஆகி, பிறிது நினைந்து, | | யாம் வெங் காதலி நோய் மிகச் சாஅய், | | சொல்லியது மதி, நீயே | 5 | முல்லை நல் யாழ்ப் பாண! மற்று எமக்கே? | |
| பிரிந்து உறையும் தலைமகன் தலைமகள் விட்ட தூதாய்ச் சென்ற பாணனை, 'அவள் சொல்லிய திறம் கூறு' எனக் கேட்டது. 8 | | |
|
|
479 | | சொல்லுமதி பாண! சொல்லுதோறு இனிய | | நாடு இடை விலங்கிய எம்வயின், நாள்தொறும், | | அரும் பனி கலந்த அருள் இல் வாடை | | தனிமை எள்ளும் பொழுதில், | 5 | பனி மலர்க் கண்ணி கூறியது எமக்கே. | |
| தலைவி விடத் தூதாய்ச் சென்ற பாணன் மாற்றம் கூறக் கேட்ட தலைமகன், 'இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாக இன்னும் கூற வேண்டும்' எனக் கூறியது. 9 | | |
|
|
480 | | நினக்கு யாம் பாணரேம் அல்லேம்; எமக்கு | | நீயும் குருசிலை அல்லை மாதோ | | நின் வெங் காதலி தன் மனைப் புலம்பி, | | ஈர் இதழ் உண்கண் உகுத்த | 5 | பூசல் கேட்டும் அருளாதோயே! | |
| தலைமகட்குத் தூதாய்ப் பாசறைக்கண் சென்ற பாணன் தலைமகனை நெருங்கிச் சொல்லியது. 10 | | |
|
|