481 | | சாய் இறைப் பணைத் தோள், அவ் வரி அல்குல், | | சேயிழை மாதரை உள்ளி, நோய் விட | | முள் இட்டு ஊர்மதி, வலவ! நின் | | புள் இயல் கலி மாப் பூண்ட தேரே. | 5 | வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகற்குக் கூறியது. | |
| இனி வருகின்ற பாட்டு ஒன்பதிற்கும் இஃது ஒக்கும். | | |
|
|
482 | | தெரிஇழை அரிவைக்குப் பெரு விருந்து ஆக | | வல்விரைந்து கடவுமதி பாக! வெள் வேல் | | வென்று அடு தானை வேந்தனொடு | |
| நாள் இடைச் சேப்பின், ஊழியின் நெடிதே! 2 | | |
|
|
483 | | ஆறு வனப்பு எய்த அலர் தாயினவே; | | வேந்து விட்டனனே; மா விரைந்தனவே; | | முன்னுறக் கடவுமதி, பாக! | |
| நல் நுதல் அரிவை தன் நலம்பெறவே. 3 | | |
|
|
484 | | வேனில் நீங்கக் கார் மழை தலைஇ, | | காடு கவின் கொண்டன்று பொழுது; பாடு சிறந்து | | கடிய கடவுமதி, பாக! | |
| நெடிய நீடினம், நேரிழை மறந்தே. 4 | | |
|
|
485 | | அரும் படர் அவலம் அவளும் தீர, | | பெருந் தோள் நலம்வர யாமும் முயங்க, | | ஏமதி, வலவ! தேரே | |
| மா மருண்டு உகளும் மலர் அணிப் புறவே. 5 | | |
|
|
486 | | பெரும் புன் மாலை ஆனாது நினைஇ, | | அரும் படர் உழத்தல் யாவது? என்றும் | | புல்லி ஆற்றாப் புரையோள் காண | | வள்பு தெரிந்து ஊர்மதி, வலவ! நின் | |
| புள் இயல் கலி மாப் பூண்ட தேரே. 6 | | |
|
|
487 | | இது மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே; | | செறிதொடி உள்ளம் உவப்ப | |
|
|
|
488 | | கருவி வானம் பெயல் தொடங்கின்றே; | | பெரு விறல் காதலி கருதும் பொழுதே; | | விரி உளை நன் மாப் பூட்டி, | |
| பருவரல் தீர, கடவுமதி தேரே! 8 | | |
|
|
489 | | அஞ்சிறை வண்டின் அரியினம் மொய்ப்ப, | | மென் புல முல்லை மலரும் மாலை, | | பையுள் நெஞ்சின் தையல் உவப்ப, | | நுண் புரி வண் கயிறு இயக்கி, நின் | |
| வண் பரி நெடுந் தேர் கடவுமதி, விரைந்தே. 9 | | |
|
|
490 | | அம் தீம் கிளவி தான் தர, எம் வயின் | | வந்தன்று | | ..................................................................................................... | |
| ஆய் மணி நெடுந் தேர் கடவுமதி, விரைந்தே. 10 | | |
|
|