தொடக்கம்   முகப்பு
481 - 490 தேர் வியங்கொண்டபத்து
481
சாய் இறைப் பணைத் தோள், அவ் வரி அல்குல்,
சேயிழை மாதரை உள்ளி, நோய் விட
முள் இட்டு ஊர்மதி, வலவ! நின்
புள் இயல் கலி மாப் பூண்ட தேரே.
5
வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகற்குக் கூறியது.
இனி வருகின்ற பாட்டு ஒன்பதிற்கும் இஃது ஒக்கும்.
 
482
தெரிஇழை அரிவைக்குப் பெரு விருந்து ஆக
வல்விரைந்து கடவுமதி பாக! வெள் வேல்
வென்று அடு தானை வேந்தனொடு
நாள் இடைச் சேப்பின், ஊழியின் நெடிதே! 2
 
483
ஆறு வனப்பு எய்த அலர் தாயினவே;
வேந்து விட்டனனே; மா விரைந்தனவே;
முன்னுறக் கடவுமதி, பாக!
நல் நுதல் அரிவை தன் நலம்பெறவே. 3
 
484
வேனில் நீங்கக் கார் மழை தலைஇ,
காடு கவின் கொண்டன்று பொழுது; பாடு சிறந்து
கடிய கடவுமதி, பாக!
நெடிய நீடினம், நேரிழை மறந்தே. 4
 
485
அரும் படர் அவலம் அவளும் தீர,
பெருந் தோள் நலம்வர யாமும் முயங்க,
ஏமதி, வலவ! தேரே
மா மருண்டு உகளும் மலர் அணிப் புறவே. 5
 
486
பெரும் புன் மாலை ஆனாது நினைஇ,
அரும் படர் உழத்தல் யாவது? என்றும்
புல்லி ஆற்றாப் புரையோள் காண
வள்பு தெரிந்து ஊர்மதி, வலவ! நின்
புள் இயல் கலி மாப் பூண்ட தேரே. 6
 
487
இது மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே;
செறிதொடி உள்ளம் உவப்ப
மதிஉடை வலவ! ஏமதி தேரே. 7
 
488
கருவி வானம் பெயல் தொடங்கின்றே;
பெரு விறல் காதலி கருதும் பொழுதே;
விரி உளை நன் மாப் பூட்டி,
பருவரல் தீர, கடவுமதி தேரே! 8
 
489
அஞ்சிறை வண்டின் அரியினம் மொய்ப்ப,
மென் புல முல்லை மலரும் மாலை,
பையுள் நெஞ்சின் தையல் உவப்ப,
நுண் புரி வண் கயிறு இயக்கி, நின்
வண் பரி நெடுந் தேர் கடவுமதி, விரைந்தே. 9
 
490
அம் தீம் கிளவி தான் தர, எம் வயின்
வந்தன்று
.....................................................................................................
ஆய் மணி நெடுந் தேர் கடவுமதி, விரைந்தே. 10
 
மேல்