51 | | நீர் உறை கோழி நீலச் சேவல் | | கூர் உகிர்ப் பேடை வயாஅம் ஊர! | | புளிங்காய் வேட்கைத்து அன்று, நின் | | மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே. | |
| வாயில் பெற்றுப் புகுந்து போய்ப் புறத்தொழுக்கம் ஒழுகி, பின்பும் வாயில் வேண்டும் தலைமகற்குத் தோழி மறுத்தது. 1 | | |
|
|
52 | | வயலைச் செங் கொடிப் பிணையல் தைஇச் | | செவ் விரல் சிவந்த சேயரி மழைக் கண் | | செவ் வாய்க் குறுமகள் இனைய; | | எவ் வாய் முன்னின்று மகிழ்ந! நின் தேரே? | |
| வாயில் பெற்றுக் கூடியிருந்த தலைமகற்குத் தோழி நகையாடிச் சொல்லியது. 2 | | |
|
|
53 | | துறை எவன் அணங்கும், யாம் உற்ற நோயே? | | சிறை அழி புதுப் புனல் பாய்ந்தெனக் கலங்கிக் | | கழனித் தாமரை மலரும் | | பழன ஊர! நீ உற்ற சூளே. | |
| தலைவி தன்னுடன் போய்ப் புனலாடிய வழி, 'இதுபரத்தையருடன் ஆடிய துறை' என நினைந்து பிறந்த மெலிவை மறைத்தமையை உணர்ந்த தலைமகன், மனைவயின் புகுந்துழி, 'தெய்வங்கள் உறையும் துறைக்கண்ணே நாம் ஆடினவதனால் பிறந்தது கொல், நினக்கு இவ் | | |
|
|
54 | | திண் தேர்த் தென்னவன் நல் நாட்டு உள்ளதை | | வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும் | | தேனூர் அன்ன இவள் தெரிவளை நெகிழ, | | ஊரின் ஊரனை நீ தர, வந்த | 5 | பைஞ்சாய்க் கோதை மகளிர்க்கு | | அஞ்சுவல், அம்ம! அம் முறை வரினே. | |
| வாயில் வேண்டிவந்த தலைமகற்குத் தலைமகள் குறிப்பு அறிந்த தோழி, அவன் கொடுமை கூறி, வாயில் மறுத்தது. 4 | | |
|
|
55 | | கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும், | | தேர் வண் கோமான், தேனூர் அன்ன இவள் | | நல் அணி நயந்து நீ துறத்தலின், | | பல்லோர் அறியப் பசந்தன்று, நுதலே. | | வரைந்த அணிமைக்கண்ணே புறத்தொழுக்கம் ஒழுகி, வாயில் வேண்டி வந்து, தன் மெலிவு கூறிய தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லியது. 5 | | |
|
|
56 | | பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா, | | வெல் போர்ச் சோழர், ஆமூர் அன்ன இவள் | | நலம்பெறு சுடர் நுதல் தேம்ப, | | எவன் பயம் செய்யும், நீ தேற்றிய மொழியே? | | புறத்தொழுக்கம் உளதாகியது அறிந்து தலைமகள் மெலிந்துழி, 'அஃது இல்லை' என்று தேற்றும் தலைமகற்குத் தோழி சொல்லியது. 6 | | |
|
|
57 | | பகலில் தோன்றும் பல் கதிர்த் தீயின் | | ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன | | இவள் நலம் புலம்பப் பிரிய, | | அனைநலம் உடையோளோ மகிழ்ந! நின் பெண்டே? | | தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்று என்பது கேட்ட தோழி அவனை வினாயது. 7 | | |
|
|
58 | | விண்டு அன்ன வெண்ணெல் போர்வின், | | கை வண் விராஅன், இருப்பை அன்ன | | இவள் அணங்குற்றனை போறி; | | பிறர்க்கும் அனையையால்; வாழி நீயே! | | உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் புலந்த தலைமகற்குத் தோழி கூறியது. 8 | | |
|
|
243 | | கறி வளர் சிலம்பிற் கடவுள் பேணி, | | அறியா வேலன், 'வெறி' எனக் கூறும்; | | அது மனம் கொள்குவை, அனை! இவள் | | புது மலர் மழைக் கண் புலம்பிய நோய்க்கே. | |
| தாயுழை அறியாமை கூறித் தோழி வெறி விலக்கியது. 3 | | |
|
|
245 | | பொய்யா மரபின் ஊர் முது வேலன் | | கழங்கு மெய்ப்படுத்து, கன்னம் தூக்கி, | | 'முருகு' என மொழியும்ஆயின், | | கெழுதகைகொல் இவள் அணங்கியோற்கே? | |
| தலைமகன் சிறைப்புறத்தானாக, வெறி அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. 5 | | |
|
|
247 | | அன்னை தந்தது ஆகுவது அறிவென்: | | பொன் நகர் வரைப்பில் கன்னம் தூக்கி, | | 'முருகு' என மொழியும் ஆயின், | | அரு வரை நாடன் பெயர்கொலோ, அதுவே? | |
| வெறி விலக்கலுறும் தோழி தமர் கேட்பத் தலைமகளை வினவுவாளாய்ச் சொல்லியது. 7 | | |
|
|
249 | | பெய்ம்மணல் வரைப்பில் கழங்கு படுத்து, அன்னைக்கு, | | 'முருகு' என மொழியும் வேலன்; மற்று அவன் | | வாழிய இலங்கும் அருவிச் | | சூர் மலை நாடனை அறியாதோனே! | |
| வேலன் கூறிய மாற்றத்தை மெய்யெனக் கொண்ட தாய் கேட்பத் தலைமகட்குத் தோழி கூறியது. 9 | | |
|
|
251 | | குன்றக் குறவன் ஆர்ப்பின், எழிலி | | நுண் பல் அழி துளி பொழியும் நாட! | | நெடு வரைப் படப்பை நும் ஊர்க் | | கடு வரல் அருவி காணினும் அழுமே. | |
| வரையாது வந்தொழுகும் தலைமகற்கு வரைவு வேட்ட தோழி கூறியது. 1 | | |
|
|