| 51 | | நீர் உறை கோழி நீலச் சேவல் | | கூர் உகிர்ப் பேடை வயாஅம் ஊர! | | புளிங்காய் வேட்கைத்து அன்று, நின் | | மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே. | |
| | வாயில் பெற்றுப் புகுந்து போய்ப் புறத்தொழுக்கம் ஒழுகி, பின்பும் வாயில் வேண்டும் தலைமகற்குத் தோழி மறுத்தது. 1 | | |
|
|
|
| 56 | | | பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா, | | | வெல் போர்ச் சோழர், ஆமூர் அன்ன இவள் | | | நலம்பெறு சுடர் நுதல் தேம்ப, | | | எவன் பயம் செய்யும், நீ தேற்றிய மொழியே? | | | புறத்தொழுக்கம் உளதாகியது அறிந்து தலைமகள் மெலிந்துழி, 'அஃது இல்லை' என்று தேற்றும் தலைமகற்குத் தோழி சொல்லியது. 6 | | |
|
|
|
| 58 | | | விண்டு அன்ன வெண்ணெல் போர்வின், | | | கை வண் விராஅன், இருப்பை அன்ன | | | இவள் அணங்குற்றனை போறி; | | | பிறர்க்கும் அனையையால்; வாழி நீயே! | | | உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் புலந்த தலைமகற்குத் தோழி கூறியது. 8 | | |
|
|
|
| 59 | | | கேட்டிசின் வாழியோ, மகிழ்ந! ஆற்றுற, | | | மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர | | | நினக்கு மருந்து ஆகிய யான், இனி, | | | இவட்கு மருந்து அன்மை நோம், என் நெஞ்சே. | | | தலைமகள் ஆற்றாளாம் வண்ணம் மனைக்கண் வரவு சுருங்கிய தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாகிய வழி ஆற்றாளாகிய தோழி சொல்லியது. 9 | | |
|
|
|
| 61 | | நறு வடி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் | | நெடு நீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம், | | கை வண் மத்தி, கழாஅர் அன்ன | | நல்லோர் நல்லோர் நாடி, | 5 | வதுவை அயர விரும்புதி நீயே. | |
| | 'வதுவை அயர்ந்தாள் ஒரு பரத்தையைச் சில் நாளில் விட்டு, மற்றொரு பரத்தையை வதுவை அயர்ந்தான்' என்பது அறிந்த தலைமகள் அவன் மனைவயின் புக்குழிப் புலந்தாளாக,'இது மறைத்தற்கு அரிது' என உடன்பட்டு, 'இனி என்னிடத்து இவ்வாறு நிகழாது' | | |
|
|
|