81 | | குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை | | அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும், | | மலர் அணி வாயில் பொய்கை, ஊர! நீ | | என்னை 'நயந்தனென்' என்றி; நின் | 5 | மனையோள் கேட்கின், வருந்துவள் பெரிதே. | |
| தன்னைக் கொடுமை கூறினாள் தலைமகள் என்பது கேட்ட பரத்தை, தலைமகன் வந்து தன்மேல் அன்புடைமை கூறினானாக, அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. 1 | | |
|
|
82 | | வெகுண்டனள் என்ப, பாண! நின் தலைமகள் | | 'மகிழ்நன் மார்பின் அவிழ் இணர் நறுந் தார்த் | | தாது உண் பறவை வந்து, எம் | | போது ஆர் கூந்தல் இருந்தன' எனவே. | |
| மனைவயிற் புகுந்த பாணற்குத் தலைமகன் கேட்குமாற்றால் தலைமகள் சொல்லியது. 2 | | |
|
|
83 | | மணந்தனை அருளாய் ஆயினும், பைபயத் | | தணந்தனை ஆகி, உய்ம்மோ நும் ஊர் | | ஒண் தொடி முன் கை ஆயமும் | | தண் துறை ஊரன் பெண்டு எனப்படற்கே. | |
| வரைந்த அணுமைக்கண்ணே தலைமகற்குப் புறத்தொழுக்கம் உண்டாகிய வழி, அதனை அறிந்த தலைவி அவனோடு புலந்து சொல்லியது. 3 | | |
|
|
84 | | செவியின் கேட்பினும் சொல் இறந்து வெகுள்வோள், | | கண்ணின் காணின், என் ஆகுவள்கொல் | | நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும் | | தைஇத் தண் கயம் போல, | 5 | பலர் படிந்து உண்ணும் நின் பரத்தை மார்பே? | |
| பரத்தையர் மனைக்கண் தங்கிப் புணர்ச்சிக் குறியோடு வாயில் வேண்டி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. 4 | | |
|
|
85 | | வெண் நுதல் கம்புள் அரிக் குரல் பேடை | | தண் நறும் பழனத்துக் கிளையோடு ஆலும் | | மறு இல் யாணர் மலி கேழ் ஊர! நீ | | சிறுவரின் இனைய செய்தி; | 5 | நகாரோ பெரும! நிற் கண்டிசினோரே? | |
| தலைமகன் பரத்தையர்மேல் காதல் கூர்ந்து நெடித்துச் செல்வுழி, மனையகம் புகுந்தானாகத் தலைவி கூறியது. 5 | | |
|
|
86 | | வெண் தலைக் குருகின் மென் பறை விளிக் குரல் | | நீள் வயல் நண்ணி இமிழும் ஊர! | | எம் இவண் நல்குதல் அரிது; | | நும் மனை மடந்தையொடு தலைப்பெய்தீமே. | |
| 'புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினார் கூறக் கேட்டான்' என்பது அறிந்த பரத்தை அதற்குப் புலந்து, தலைமகற்குச் சொல்லியது. 6 | | |
|
|
87 | | பகன்றைக் கண்ணி பல் ஆன் கோவலர் | | கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும் | | யாணர் ஊர! நின் மனையோள் | | யாரையும் புலக்கும்; எம்மை மற்று எவனோ? | |
| தலைமகள் தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட காதல்பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்ப, தலைமகனோடு புலந்து சொல்லியது. 7 | | |
|
|
88 | | வண் துறை நயவரும் வள மலர்ப் பொய்கைத் | | தண் துறை ஊரனை, எவ்வை எம் வயின் | | வருதல் வேண்டுதும் என்பது | | ஒல்லேம் போல், யாம் அது வேண்டுதுமே. | |
| தலைமகனை நயப்பித்துக் கொள்கையில் விருப்பு இல்லாதாள் போல, அவ்வாறு கோடலையே விரும்புவாள், 'அது தனக்கு முடியாது' எனத் தலைமகள் புறனுரைத்தாள் எனக் கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினார்க்குச் சொல்லியது. 8 | | |
|
|
89 | | அம்ம வாழி, பாண! எவ்வைக்கு | | எவன்? பெரிது அளிக்கும் என்ப பழனத்து | | வண்டு தாது ஊதும் ஊரன் | | பெண்டு என விரும்பின்று, அவள்தன் பண்பே. | |
| 'தலைமகன் தலைமகளைப் போற்றி ஒழுகாநின்றான்' என்பது கேட்ட காதல்பரத்தை அவன் பாணனுக்குச் சொல்லுவாளாய் அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. 9 | | |
|
|
90 | | மகிழ்நன் மாண்குணம் வண்டு கொண்டனகொல்? | | வண்டின் மாண்குணம் மகிழ்நன் கொண்டான்கொல்? | | அன்னது ஆகலும் அறியாள், | | எம்மொடு புலக்கும், அவன் புதல்வன் தாயே. | |
| தலைமகன் தன் மனைக்கண் சொல்லாமல் தான் விலக்குகின்றாளாகத் தலைமகள் கூறினாள் என்பது கேட்ட காதல் பரத்தை தலைமகன் கேட்குமாற்றால் அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. 10 | | |
|
|