148


(15) ஞாழற்பத்து


148. எக்கர் ஞாழ லிகந்துபடு பெருஞ்சினை
   வீயினிது கமழுந் துறைவனை
   நீயினிது முயங்குமதி காத லோயே.

  எ-து களவொழுக்கத்தின் ‘விளைவறியாது அஞ்சிய வருத்தம்
நீங்கக் கரணவகையான் வதுவை முடித்தபின்பு தலைமகளைப் பள்ளி
யிடத்து உய்க்கும் தோழி சொல்லியது.
 (ப-ரை.) ‘எக்கர்ஞாழல்..............கமழுந்துறைவன்? என்றது
அவன் அன்பு இதன்மேல் இல்லையென வளர்ந்து பயன்பட்டதிறம்
கூறியவாறு.
  குறிப்பு. இகத்தல்-கடத்தல், சினை-கிளை, வீ-மலர். காதலோய்
என்றது தலைவியை, காதலோய்! துறைவனை இனிது முயங்குமதி.
மதி : முன்னிலையசை. கரணம்-மணச்சடங்கு.
  (மேற்,) மு. களவுக்காலத்துக்குட்பட்ட வருத்தம் நீங்கினமை
கூறுங்கால் தோழிக்குக் கூற்று நிகழும் (தொல். கற்பு, 9, ந)
  (பி-ம்.) 1 ‘விளைவறிவது?    ( 8 )