197

(20). வளைப் பத்து


197. இலங்குவளை தெளிர்ப்ப வலவ னாட்டி
   முகம்புதை கதுப்பின் 1ளிறைஞ்சிநின் றோளே
   புலம்கொண் மாலை மறைய
   நலங்கே ழாக நல்குவ ளெனக்கே.

  எ-து தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் தலைவியது நிலைமை
கண்டு சொல்லியது.
  குறிப்பு. தெளிர்ப்ப-ஒலிக்க. அலவன்-நண்டை. ஆட்டி-
அலைத்து விளையாடி. அலவனாட்டல் : பட். 101; நற். 363 : 10;
குறுந். 303 : 7. முகம் புதை கதுப்பினள்-முகத்தை மறைத்த கூந்
தலையுடையவள். புலம்புகொள்மாலை-தனிமையைக் கொண்ட
மாலைக் காலம்; குறுந். 314 : 3. நின்றோள் மாலை மறைய எனக்கு
ஆகம் நல்குவள்.
  (மேற்.) மு. இடந்தலைப் பாட்டில் தலைவி நிலைகண்டு கூறியது ;
இது திணை மயக்குறுதலுள் நெய்தலிற் புணர்தல் நிமித்தம் (தெ
்.
அகத். 12, ந.). தலைவன் இவ்விடத்து இவ்வியற்றென்றல் (நம்பி.
களவு. 21)
  (பி-ம்.) 1 ‘ளாயத்து நின்றோளே’     ( 7 )