257

3. குறிஞ்சி

(26) குன்றக்குறவன் பத்து


257. குன்றக் குறவன் கடவுட் பேணி
   இரந்தனன் பெற்ற வெல்வளைக் குறுமகள்
   ஆயரி நெடுங்கண் கலிழச்
   1சேயதாற் றெய்யநீ பிரியு நாடே,

  எ-து ‘வரைவிடைவைத்துப் பிரிவல்? என்ற தலைமகற்குத்
தோழி உடன்படாது கூறியது.

   குறிப்பு. கடவுளைப் பேணி. இரந்தனன்-இரந்து; முற்றெச்சம்.
எல்-ஒளி. ஆயரி-அழகிய செவ்வரி கருவரிகள். கலிழ-கலங்க.
சேயது-நெடுந்தூரத்தது. தெய்ய : அசைநிலை. குறுமகளது கண்
கலிழ நீ பிரியும் நாடு சேயது. (பி-ம்.) 1 ‘சேய்த்தாற்? ( 7
)