302

4 பாலை

(31) செலவழுங்குவித்த பத்து


302. அரும்பொருள் செய்வினை 1தப்பற்கு முரித்தே
    பெருந்தோ ளரிவை தகைத்தற்கு முரியள்
    செல்லா யாயினோ நன்றே
    மெல்லம் புலம்ப விவளழப் பிரிந்தே.

  எ-து பொருள் வயிற் பிரியும் தலைமகன் 2பிரிவுடன் படுத்த
வேண்டுமென்றானாக அவற்குத் தோழி சொல்லியது.

  குறிப்பு. தப்பல் - தவறுதல் . அரிவை என்றது தலைவியை.
தகைத்தற்கும்-வருத்தத்தினின்றும் தடுத்தற்கும். மெல்லம் புலம்ப:
ஐங். 120 : 5, குறிப்பு. பிரிந்துசெல்லாயாயின் நன்றே.

   (பி-ம்) 1 ‘தப்பற்கு முரியள்? 2 ‘பிரிவுடன் படுக்க ( 2 )