எ-து பாசறைக்கண் இருந்த தலைமகன் பருவவரவின்கண்
தலைமகளை நினைந்து நெஞ்சொடுபுலந்து சொல்லியது.
குறிப்பு. புகழ்சால் சிறப்பு-புகழ்மிக்க சிறப்புடைய, வந்தனை
என்றது நெஞ்சை முன்னிலைப்படுத்தி. அருந்தொழிற் கட்டூர்-அரிய
தொழிலமைந்த பாசறைக்கண். நாகு-பசு. பெயர்காலை-செல்லும்
போது. ஏறு தழீஇ நாகு பெயர்தல்; கலித். 113 : 28; சீவக. 751,
2062; நள. க. : 156. கலிழும்-கலங்கும். நெஞ்சம் : விளி. இழைத்
தனை-செய்தாய். நெஞ்சம், துறந்துவந்தனை, எம்மையும் வர
விழைத்தனை.
(மேற்.) மு. இது பகைவயிற் பிரிந்தோன் பருவங்கண்டு
தலைவியை நினைந்து நெஞ்சொடு புலம்பியது. (தொல். அகத். 41, ந.).
(பி-ம்.) 1 ‘தழீஇய’ 2 ‘வரவழைத்தனையே’ ( 5 )