496

5. முல்லை

(50) 1வரவுச்சிறப்புரைத்த பத்து


496. மாபுதல் சேர 1வரகிணர் சிறப்ப
    மாமலை புலம்பக் கார்கலித் தலைப்பப்
    பேரமர்க் கண்ணி நிற்பிரிந் துறைநர்
    தோடுணை யாக வந்தனர்
    போதவிழ் கூந்தலும் பூவிரும் புகவே.

     எ-து குறித்த பருவத்தின்கண் தலைமகன் வந்துழித் தோழி
தலைமகட்குச் சொல்லியது.

    குறிப்பு. மா-மிருகங்கள். புதல்-புதரை. இணர்-கொத்து,
மழையால் வரகு சிறத்தல் : குறுந். 220 : 1, கார்-மேகம் அலைப்ப-
வருத்த. கண்ணி : விளி. உறைநர் நின் தோளுக்குத் துணையாக
வந்தனர். கூந்தலும் பூவை விரும்புக.

    (பி-ம்.) 1 ‘வரசிறை? ( 6 )