409

5. முல்லை

(41) செவிலிகூற்றுப் பத்து


409. புதல்வற் கவைஇயினன் றந்தை மென்மொழிப்
    புதல்வன் றாயோ விருவருங் கவையினள்
    இனிது மன்றவவர் கிடக்கை
    1நனியிரும் பரப்பினிவ் வுலகுட னுறுமே.

    குறிப்பு. தந்தை புதல்வனைக் கவையினன், இருவரும்-தலை
வனையும் புதல்வனையும். அவர் கிடக்கை இனிது. இவ்வுலகுடன்-
இவ்வுலகமுழுதும்; ?உலகுடன் விளக்கும்? (யா. கா. 14, மேற்.)
உறுமே : ஒக்கும்; ஏ, அசை. மு. ஒப்பு. குறுந். 359 : 4-6.

    (பி-ம்.) 1 ‘நளி ? ( 9 )