359

4 பாலை

(36) வரவுரைத்த பத்து


359.அரும்பொருள் வேட்கைய மாகிநிற் றுறந்து
   பெருங்க லதரிடைப் பிரிந்த காலைத்
   தவநனி நெடிய வாயின வினியே
   அணியிழை யுள்ளியாம் வருதலின்
   நணிய வாயின சுரத்திடை யாறே.

   எ-து மீண்டுவந்த தலைமகன் அவளைப் பிரிகின்றகாலத்துச்
சுரத்துச் சேய்மையும் வருகின்ற காலத்து அதன் அணிமையும்
கூறியது.

   குறிப்பு. வேட்கையமாகி - விருப்பத்தை உடையேமாகி நிற்
றுறந்து-நின்னைத் துறந்து. அதர்-வழி. தவநனி நெடிய- மிகவும்
நீண்டன. அணியிழை-தலைவியை, உள்ளி - நினைந்து. நணிய.
அண்ணியதாக. ஆறு பிரிந்தகாலை தவநனி நெடியவாயின, அணி
யிழை உள்ளிவருதலின் நணியவாயின. ( 9 )