495

5. முல்லை

(50) 1வரவுச்சிறப்புரைத்த பத்து


495. 1செந்நில மருங்கிற் பன்மலர் தாஅய்ப்
    புலம்புதீர்ந் தினிய வாயின புறவே
    பின்னிருங் கூந்த னன்னலம் புனைய
    உள்ளுதொறுங் கலிழு நெஞ்சமொடு
    முள்ளெயிற் றரிவையாம் வந்த2மாறே

இதுவுமது

   குறிப்பு. தாஅய்-பரந்து. புலம்பு-துன்பம். புறவு இனிய
வாயின. பின்னிருங் கூந்தல்-பின்னுதலுற்ற பெரிய கூந்தலையுடைய
தலைவியது. கலிழும்-கலங்கும். அரிவை : விளி. வந்தமாறு-
வந்தமையால்

   (பி-ம்.) 1 ‘சென்னில? 2 ‘வாறே? ( 5 )