400 | | மள்ளர் அன்ன மரவம் தழீஇ, | | மகளிர் அன்ன ஆடுகொடி நுடங்கும் | | அரும் பதம் கொண்ட பெரும் பத வேனில், | | 'காதல் புணர்ந்தனள் ஆகி, ஆய் கழல் | 5 | வெஞ் சின விறல் வேல் காளையொடு | | இன்று புகுதரும்' என வந்தன்று, தூதே. | |
| உடன்போய் வதுவை அயரப்பட்ட தலைவி, 'தலைவனோடு இன்று வரும்' எனக் கேட்ட செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது. 10 | | |