தொடக்கம்   முகப்பு
அந்தணர்
387
'அறம் புரி அரு மறை நவின்ற நாவின்
திறம் புரி கொள்கை அந்தணிர்! தொழுவல்' என்று
ஒண்டொடி வினவும் பேதைஅம் பெண்டே!
கண்டனெம் அம்ம, சுரத்திடை அவளை
5
இன் துணை இனிது பாராட்ட,
குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே.
பின்சென்ற செவிலியால் வினாவப்பட்ட அந்தணர் அவட்குச் சொல்லியது. 7
 

 
மேல்