தொடக்கம்   முகப்பு
தாமரை
53
துறை எவன் அணங்கும், யாம் உற்ற நோயே?
சிறை அழி புதுப் புனல் பாய்ந்தெனக் கலங்கிக்
கழனித் தாமரை மலரும்
பழன ஊர! நீ உற்ற சூளே.
தலைவி தன்னுடன் போய்ப் புனலாடிய வழி, 'இதுபரத்தையருடன் ஆடிய துறை' என நினைந்து பிறந்த மெலிவை மறைத்தமையை உணர்ந்த தலைமகன், மனைவயின் புகுந்துழி, 'தெய்வங்கள் உறையும் துறைக்கண்ணே நாம் ஆடினவதனால் பிறந்தது கொல், நினக்கு இவ்

 
94
மள்ளர் அன்ன தடங் கோட்டு எருமை
மகளிர் அன்ன துணையொடு வதியும்
நிழல் முதிர் இலஞ்சிப் பழனத்ததுவே
கழனித் தாமரை மலரும்,
5
கவின் பெறு சுடர்நுதல் தந்தை, ஊரே.
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் மீள்கின்றான் சொல்லியது. 4

 
மேல்