தொடக்கம்   முகப்பு
வயலை
11
மனை நடு வயலை வேழம் சுற்றும்
துறை கேழ் ஊரன் கொடுமை நாணி,
'நல்லன்' என்றும், யாமே;
'அல்லன்' என்னும், என் தட மென் தோளே.
பாணன் முதலாயினார்க்குத் தலைமகன் கொடுமை கூறி வாயில் மறுத்த தலைமகள், கழறிய பாங்கற்கு வாயில் நேர்வாள், சொல்லியது. 'தலைவன் எவ்வாறு தப்பி ஒழுகினும், அவன் கொடுமை நின்னால் புலப்படுதல் தகாது' என்று கழறிய பாங்கிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். 1

 


 
25
புயல் புறந்தந்த புனிற்று வளர் பைங் காய்
வயலைச் செங் கொடி களவன் அறுக்கும்
கழனி ஊரன் மார்பு பலர்க்கு
இழை நெகிழ் செல்லல் ஆக்கும் அன்னாய்!
இதுவும் அது. 5

 
52
வயலைச் செங் கொடிப் பிணையல் தைஇச்
செவ் விரல் சிவந்த சேயரி மழைக் கண்
செவ் வாய்க் குறுமகள் இனைய;
எவ் வாய் முன்னின்று மகிழ்ந! நின் தேரே?
வாயில் பெற்றுக் கூடியிருந்த தலைமகற்குத் தோழி நகையாடிச் சொல்லியது. 2

 
211
நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன
வயலைஅம் சிலம்பின் தலையது
செயலைஅம் பகைத் தழை வாடும் அன்னாய்!
தலைமகன் ஆற்றாமை கண்டு, கையுறை ஏற்ற தோழி தலைமகள் தழை ஏற்க வேண்டிக் கூறியது. 1
 

 
மேல்