169 | | பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை | | ஒள் இணர் ஞாழல் முனையின், பொதி அவிழ் | | புன்னைஅம் பூஞ் சினைச் சேக்கும் துறைவன் | | நெஞ்சத்து உண்மை அறிந்தும், | 5 | என் செயப் பசக்கும் தோழி! என் கண்ணே? | |
| காதல் பரத்தையை விட்டு மற்றொருத்தியுடன் ஒழுகாநின்ற தலைமகன் வாயில் வேண்டி விடுத்துழி, வாயில் நேர்தல் வேண்டி, 'நின் கண் பசந்தனகாண்' என்று முகம்புகு தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 9 | | |