தொடக்கம்   முகப்பு
இலவம்
320
முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூ,
முழங்குஅழல் அசைவளி எடுப்ப, வானத்து
உருமுப் படு கனலின் இரு நிலத்து உறைக்கும்
கவலை அருஞ் சுரம் போயினர்
5
தவல் இல் அரு நோய் தலைத்தந்தோரே.
தலைமகன் பிரிந்துழிச் சுரத்து வெம்மை நினைந்து, தலைமகள் சொல்லியது. 10
 

 
338
அம்ம வாழி, தோழி! சாரல்
இலை இல மலர்ந்த ஓங்கு நிலை இலவம்
மலை உறு தீயின் சுரமுதல் தோன்றும்
பிரிவு அருங் காலையும், பிரிதல்
5
அரிது வல்லுநர் நம் காதலோரே.
தலைமகன் பிரிந்துழி. 'இக் காலத்தே பிரிந்தார்' எனத் தலைமகள் இரங்கிச் சொல்லியது. 8
 

 
368
எரிப் பூ இலவத்து ஊழ் கழி பல் மலர்
பொரிப் பூம் புன்கின் புகர் நிழல் வரிக்கும்
தண் பத வேனில் இன்ப நுகர்ச்சி
எம்மொடு கொண்மோ, பெரும! நின்
5
அம் மெல்லோதி அழிவிலள் எனினே!
'வேனிற்காலத்து நும்மொடு விளையாட்டு நுகர வருவல்' என்று, பருவம் குறித்துப் பிரியலுற்ற தலைமகற்குத் தோழி கூறியது. 8
 

 
மேல்