361 | | உயர்கரைக் கான் யாற்று அவிர்மணல் அகன்துறை | | வேனில் பாதிரி விரி மலர் குவைஇத் | | தொடலை தைஇய மடவரல் மகளே! | | கண்ணினும் கதவ, நின் முலையே! | 5 | முலையினும் கதவ, நின் தட மென் தோளே! | |
| புணர்ந்து உடன்போகிய தலைமகன் இடைச்சுரத்துக்கண் விளையாட்டு வகையால் பூத்தொடுக்கின்ற தலைமகளைக் கண்டு புகழ, அவள் அதற்கு நாணி, கண்புதைத்த வழிச் சொல்லியது. 1 | | |