தொடக்கம்   முகப்பு
பாதிரி
346
அவரோ வாரார்; தான் வந்தன்றே
அம் சினைப் பாதிரி அலர்ந்தென,
செங் கண் இருங் குயில் அறையும் பொழுதே! 6
 

 
361
உயர்கரைக் கான் யாற்று அவிர்மணல் அகன்துறை
வேனில் பாதிரி விரி மலர் குவைஇத்
தொடலை தைஇய மடவரல் மகளே!
கண்ணினும் கதவ, நின் முலையே!
5
முலையினும் கதவ, நின் தட மென் தோளே!
புணர்ந்து உடன்போகிய தலைமகன் இடைச்சுரத்துக்கண் விளையாட்டு வகையால் பூத்தொடுக்கின்ற தலைமகளைக் கண்டு புகழ, அவள் அதற்கு நாணி, கண்புதைத்த வழிச் சொல்லியது. 1
 

 
மேல்