208 | | அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! கானவர் | | கிழங்கு அகழ் நெடுங் குழி மல்க வேங்கைப் | | பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு, | | மணி நிற மால் வரை மறைதொறு, இவள் | 5 | அறை மலர் நெடுங் கண் ஆர்ந்தன பனியே. | |
| செவிலிக்கு அறத்தொடு நின்ற தோழி, அவளால் வரைவு மாட்சிமைப் பட்ட பின்பு, 'இவள் இவ்வாறு பட்ட வருத்தம் எல்லாம் நின்னின் தீர்ந்தது' என்பது குறிப்பின் தோன்ற அவட்குச் சொல்லியது. 8 | | |