435 | | நன்றே, காதலர் சென்ற ஆறே! | | நிலன் அணி நெய்தல் மலர, | |
| பொலன் அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே. 5 | |
436 | | நன்றே, காதலர் சென்ற ஆறே! | | நன் பொன் அன்ன சுடர் இணர்க் | |
| கொன்றையொடு மலர்ந்த குருந்துமார் உடைத்தே. 6 | | |
458 | | துணர்க் காய்க் கொன்றை குழற் பழம் ஊழ்த்தன; | | அதிர் பெயற்கு எதிரிய சிதர் கொள் தண் மலர் | | பாணர் பெருமகன் பிரிந்தென, | | மாண் நலம் இழந்த என் கண் போன்றனவே! | |
| பருவங் குறித்துப் பிரிந்த தலைமகன் வரவு பார்த்திருந்த தலைமகள் பருவ முதிர்ச்சி கூறி, ஆற்றாளாய் த்தது. 8 | | |
462 | | ஏதில பெய்ம் மழை கார் என மயங்கிய | | பேதைஅம் கொன்றைக் கோதை நிலை நோக்கி, | | எவன் இனி, மடந்தை! நின் கலிழ்வே? நின்வயின் | | தகை எழில் வாட்டுநர் அல்லர், | 5 | முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே. | |
| பருவங் கண்டு வேறுபட்ட கிழத்தியைத் தோழி, 'பருவம் அன்று' என வற்புறீஇயது. 2 | | |
497 | | குறும் பல் கோதை கொன்றை மலர, | | நெடுஞ் செம் புற்றம் ஈயல் பகர, | | மா பசி மறுப்ப, கார் தொடங்கின்றே | | பேர் இயல் அரிவை! நின் உள்ளிப் | 5 | போர் வெங் குருசில் வந்தமாறே. | |
|
500 | | கொன்றைப் பூவின் பசந்த உண்கண், | | குன்றக நெடுஞ் சுனைக் குவளை போல, | | தொல் கவின் பெற்றன இவட்கே வெல் போர் | | வியல் நெடும் பாசறை நீடிய | 5 | வய மான் தோன்றல் நீ! வந்தமாறே. | |
|
|