தொடக்கம்   முகப்பு
கொன்றை
412
காயா, கொன்றை, நெய்தல், முல்லை,
போது அவிழ் தளவமொடு பிடவு, அலர்ந்து கவினிப்
பூ அணி கொண்டன்றால் புறவே
பேர் அமர்க்கண்ணி! ஆடுகம், விரைந்தே.
இதுவும் அது. 2
 

 
420
பொன் என மலர்ந்த, கொன்றை; மணி எனத்
தேம் படு காயா மலர்ந்த; தோன்றியொடு
நன்னலம் எய்தினை, புறவே! நின்னைக்
காணிய வருதும், யாமே
5
வாள் நுதல் அரிவையொடு ஆய் நலம் படர்ந்தே.
குறித்த பருவத்து எய்திய, அணித்தாக வந்த தலைமகன் பருவத்தால் அணிகொண்ட புறவை நோக்கிச் சொல்லியது. 10
 

 
430
நெடும் பொறை மிசைய குறுங் கால் கொன்றை
அடர் பொன் என்னச் சுடர் இதழ் பகரும்
கான் கெழு நாடன் மகளே!
அழுதல் ஆன்றிசின்; அழுங்குவல் செலவே.
'பிரியுங்கொல்?' என்று ஆற்றாளாகிய தலைமகட்குத் தலைமகன் பருவ வரவு கூறி, 'இது காரணத்தாலும் பிரியேன்' எனச் சொல்லியது. 10
 

 
432
நன்றே, காதலர் சென்ற ஆறே!
சுடு பொன் அன்ன கொன்றை சூடி,
கடி புகுவனர்போல் மள்ளரும் உடைத்தே. 2
 

 
435
நன்றே, காதலர் சென்ற ஆறே!
நிலன் அணி நெய்தல் மலர,
பொலன் அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே. 5
 

 
436
நன்றே, காதலர் சென்ற ஆறே!
நன் பொன் அன்ன சுடர் இணர்க்
கொன்றையொடு மலர்ந்த குருந்துமார் உடைத்தே. 6
 

 
458
துணர்க் காய்க் கொன்றை குழற் பழம் ஊழ்த்தன;
அதிர் பெயற்கு எதிரிய சிதர் கொள் தண் மலர்
பாணர் பெருமகன் பிரிந்தென,
மாண் நலம் இழந்த என் கண் போன்றனவே!
பருவங் குறித்துப் பிரிந்த தலைமகன் வரவு பார்த்திருந்த தலைமகள் பருவ முதிர்ச்சி கூறி, ஆற்றாளாய்  த்தது. 8
 

 
462
ஏதில பெய்ம் மழை கார் என மயங்கிய
பேதைஅம் கொன்றைக் கோதை நிலை நோக்கி,
எவன் இனி, மடந்தை! நின் கலிழ்வே? நின்வயின்
தகை எழில் வாட்டுநர் அல்லர்,
5
முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே.
பருவங் கண்டு வேறுபட்ட கிழத்தியைத் தோழி, 'பருவம் அன்று' என வற்புறீஇயது. 2
 

 
497
குறும் பல் கோதை கொன்றை மலர,
நெடுஞ் செம் புற்றம் ஈயல் பகர,
மா பசி மறுப்ப, கார் தொடங்கின்றே
பேர் இயல் அரிவை! நின் உள்ளிப்
5
போர் வெங் குருசில் வந்தமாறே.

 
500
கொன்றைப் பூவின் பசந்த உண்கண்,
குன்றக நெடுஞ் சுனைக் குவளை போல,
தொல் கவின் பெற்றன இவட்கே வெல் போர்
வியல் நெடும் பாசறை நீடிய
5
வய மான் தோன்றல் நீ! வந்தமாறே.
 

 
மேல்