43.மன்னனின் செல்வ மகிழ்ச்சி | | கவரி முச்சி, கார் விரி கூந்தல், ஊசல் மேவல், சேயிழை மகளிர் உரல் போல் பெருங் கால், இலங்கு வாள் மருப்பின், பெருங் கை, மதமாப் புகுதரின், அவற்றுள் விருந்தின் வீழ் பிடி எண்ணு முறை பெறாஅ: | 5 | கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை வட திசை எல்லை இமயம் ஆக, தென்அம் குமரியொடு ஆயிடை அரசர் முரசுடைப் பெருஞ் சமம் ததைய, ஆர்ப்பு எழ, சொல் பல நாட்டைத் தொல் கவின் அழித்த | 10 | போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ! இரும் பணை திரங்கப் பெரு பெயல் ஒளிப்ப, குன்று வறம் கூரச் சுடர் சினம் திகழ, அருவி அற்ற பெரு வறற் காலையும், அருஞ் செலல் பேர் ஆற்று இருங் கரை உடைத்து, | 15 | கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய, வரைவு இல் அதிர்சிலை முழங்கி, பெயல் சிறந்து, ஆர் கலி வானம் தளி சொரிந்தாஅங்கு, உறுவர் ஆர ஓம்பாது உண்டு, நகைவர் ஆர நன் கலம் சிதறி, | 20 | 'ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரல் பாடு விறலியர் பல் பிடி பெறுக! துய் வீ வாகை, நுண் கொடி உழிஞை, வென்றி மேவல், உரு கெழு சிறப்பின், கொண்டி மள்ளர் கொல் களிறு பெறுக! | 25 | மன்றம் படர்ந்து, மறுகு சிறைப் புக்கு, கண்டி நுண் கோல் கொண்டு, களம் வாழ்த்தும் அகவலன் பெறுக, மாவே!' என்றும், இகல் வினை மேவலை ஆகலின், பகைவரும் தாங்காது புகழ்ந்த, தூங்கு கொளை முழவின், | 30 | தொலையாக், கற்ப! நின் நிலை கண்டிகுமே! நிணம் சுடு புகையொடு கனல் சினம் தவிராது, நிரம்பு அகல்பு அறியா ஏறா ஏணி, நிறைந்து நெடிது இராத் தசும்பின், வயிரியர் உண்டெனத் தவாஅக் கள்ளின் | 35 | வண் கை வேந்தே! நின் கலி மகிழானே. | | துறை:இயல்மொழி வாழ்த்து வண்ணமும் தூக்கும்:அது பெயர்:றா ஏணி | |
| |