89.மன்னவனது நாடு காவல் சிறப்புக் கூறி, வாழ்த்துதல் | | வானம் பொழுதொடு சுரப்ப, கானம் தோடு உறு மட மான் ஏறு புணர்ந்து இயல, புள்ளும் மிஞிறும் மாச் சினை ஆர்ப்ப, பழனும் கிழங்கும் மிசையறவு அறியாது, பல் ஆன் நல் நிரை புல் அருந்து உகள, | 5 | பயம் கடை அறியா வளம் கெழு சிறப்பின் பெரும் பல் யாணர்க் கூலம் கெழும, நன் பல் ஊழி நடுவு நின்று ஒழுக பல் வேல் இரும் பொறை! நின் கோல் செம்மையின், நாளின் நாளின் நாடு தொழுது ஏத்த, | 10 | உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ, அரசியல் பிழையாது, செரு மேந்தோன்றி, நோய் இலைஆகியர், நீயே நின்மாட்டு அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது, கனவினும் பிரியா உறையுளொடு, தண்ணெனத் | 15 | தகரம் நீவிய துவராக் கூந்தல், வதுவை மகளிர் நோக்கினர், பெயர்ந்து வாழ் நாள் அறியும் வயங்கு சுடர் நோக்கத்து, மீனொடு புரையும் கற்பின், வாள் நுதல் அரிவையொடு காண்வரப் பொலிந்தே! | 20 | துறை:காவல் முல்லை வண்ணமும் தூக்கும்:அது பெயர்:துவராக் கூந்தல் | |
| |