34.வென்றிச் சிறப்பு | | ஒரூஉப நின்னை ஒரு பெரு வேந்தே! ஓடாப் பூட்கை, ஒண் பொறிக் கழற் கால், இரு நிலம் தோயும் விரிநூல் அறுவையர்: செவ் உளைய மா ஊர்ந்து, நெடுங் கொடிய தேர் மிசையும், | 5 | ஓடை விளங்கும் உரு கெழு புகர் நுதல் பொன் அணி யானை முரண் சேர் எருத்தினும், மன் நிலத்து அமைந்த ... ... ... மாறா மைந்தர் மாறு நிலை தேய, முரைசுடைப் பெருஞ் சமம் ததைய, ஆர்ப்பு எழ, | 10 | அரைசு படக் கடக்கும் ஆற்றல் புரை சால் மைந்த! நீ ஓம்பல் மாறே. | | துறை:தும்பை அரவம் வண்ணமும் தூக்கும்:அது பெயர்:ஒண் பொறிக் கழற் கால் | |
| |