28.நாடு காத்தல் சிறப்பு | | திரு உடைத்து அம்ம பெரு விறற் பகைவர் பைங் கண் யானைப் புணர் நிரை துமிய, உரம் துரந்து எறிந்த, கறை அடி, கழற் கால், கடு மா மறவர் கதழ் தொடை மறப்ப, இளை இனிது தந்து, விளைவு முட்டுறாது, | 5 | புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின். விடு நிலக் கரம்பை விடர் அளை நிறைய கோடை நீட, குன்றம் புல்லென, அருவி அற்ற பெரு வறற் காலையும்; நிவந்து கரை இழிதரும் நனந் தலைப் பேரியாற்றுச் | 10 | சீருடை வியன் புலம் வாய் பரந்து மிகீஇயர், உவலை சூடி உருத்து வரு மலிர் நிறைச் செந் நீர்ப் பூசல் அல்லது, வெம்மை அரிது, நின் அகன் தலை நாடே. | | துறை: நாடு வாழ்த்து வண்ணமும் தூக்கும்:அது பெயர்:உருத்து வரு மலிர் நிறை | |
| |