பக்கம் எண் :

107

     விழையாப் பகுத்தூண் எனக் கூட்டுக. ஆண்மையையுடைய நீ எனக்
கூட்டுதலும் ஒன்று.

     16. நீ பிறர்பொருட்டு வாழ்வாயாதலால்; "தனக்கென வாழாப் பிறர்க்குரி
யாளன்" (அகநா. 54 : 13: மணி. 5 : 73). மாறு: ஏதுப் பொருள் தருவதோர்
இடைச்சொல்; 'மாறென்பது ஆனென்னும் உருபின் பொருள் படுவதோரிடைச்
சொல்' (பதிற். 54, 9 : உரை)

     பிறர்க்கென நீ வாழ்தியாதலால் (16) எல்லாருள்ளும் நின் நல்லிசைமிகும்
(2)

     (பி - ம்.) 16. வாழ்கநீ. (8)

39. பிறர்க்கென வாழ்தி நீ யாகன் மாறே
எமக்கிலென் னார்நின் மறங்கூறு குழாத்தர்
துப்புத்துறை போகிய வெப்புடைத் தும்பைக்
கறுத்த தெவ்வர் கடிமுனை யலற
 5 எடுத்தெறிந் திரங்கு மேவல் வியன்பணை
உருமென வதிர்பட்டு முழங்கிச் செருமிக்
கடங்கா ராரரண் வாடச் செல்லும்
கால னனைய கடுஞ்சின முன்ப
வாலிதின், நூலினிழையா நுண்மயி ரிழைய
 10 பொறித்த போலும் புள்ளி யெருத்திற்
புன்புறப் புறவின் கணநிரை யலற
அலந்தலை வேலத் துலவை யஞ்சினைச்
சிலம்பி கோலிய வலங்கற் போர்வையின்
இலங்குமணி மிடைந்த பசும்பொற் படலத்
 15 தவிரிழை தைஇ மின்னுமிழ் பிலங்கச்
சீர்மிகு முத்தந் தைஇய
நார்முடிச் சேரனின் போர்நிழற் புகன்றே.

     துறை - வாகை. வண்ணமும் தூக்கும் அது. பெயர் - ஏவல்
வியன்பணை (5)

     (ப - ரை) 2. எமக்கிலென்னார் நின் மறங்கூறு 1குழாத்தரென்றது
நின்படைப் குழாத்திற் படைத்தலைவர் நீ பிறர்க்கென வாழ்தியாகையால்,
அவரும் தம்பால் இரந்து சென்றார்க்கு 2எமக்கு இல்லையென்று
மறாரென்றவாறு.


     1குழாமென்றது படையையாதலின் குழாத்தர் படைவீரர்கள் ஆயினர்.

     2குறள், 223 பரிமேல். விசேட.