பக்கம் எண் :

110

எழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்துப்
பொன்னங் கண்ணிப் பொலந்தோர் நன்னன்
 15 சுடர்வீ வாகைக் கடிமுத றடிந்த
தார்மிகு மைந்தி னார்முடிச் சேரல்
புன்கா லுன்னஞ் சாய்த் தெண்கண்
வறிதுகூட் டரிய லிரவலர்த் தடுப்பத்
தான்றர வுண்ட நனை நறவு மகிழ்ந்து
 20 நீரிமிழ் சிலம்பி னேரி யோனே
செல்லா யோதில் சில்வளை விறலி
மலர்ந்த வேங்கையின் வயங்கிழை யணிந்து
மெல்லியன் மகளி ரெழினலஞ் சிறப்பப்
பாணர் மைப்பூ மலைய விளையர்
 25 இன்களி வழாஅ மென்சொ லமர்ந்து
நெஞ்சுமலி யுவகையர் வியன்களம் வாழ்த்தத்
தோட்டி நீவாது தொடிசேர்பு நின்று
பாக ரேவலி னொண்பொறி பிசிரக்
காடுதலைக் கொண்ட நாடுகா ணவிர்சுடர்
 30 அழல்விடுபு மரீஇய மைந்திற்
றொழில்புகல் யானை நல்குவன் பலவே.


     துறை - விறலியாற்றுப்படை. வண்ணமும் தூக்கும் அது. பெயர் -
நாடுகா ணவிர்சுடர். (29)

     (ப - ரை) போர்நிழற் புகன்ற சுற்றமென்பது படைத்தலைவரை.
ஊர்முக மென்றது படைபொரும் இடத்தை.

     ஆடவர் போர்முகத்திறுப்ப (4) வயலிலே (5) வந்து இறைகொண்டன்று
தானை (6); களைநர் யார், இனிப்பிறர் (7); பெரும, நின்றானை (2) சுற்றமொடு
ஊர்முகத்து (1) இறாஅலியரெனச் (2) சொல்லிப் பேணி (7) என மாறிக்
கூட்டுக.

     9. ஒன்னாரென்றது முன்சொன்ன மன்னெயின்மறவர் (8) அல்லாத
பகைவரை.

     வெண்டோடு நிரைஇய (10) பூமலைந்து (9) என மாறிக் கூட்டுக.

     11. மன்பதை நிரப்பியென்றது தன் படையை அவ்வேந்தர் நாட்டுத்தன்
ஆணையானே நிரப்பியென்றவாறு.

     12. வென்றியாடியவென்னும் பெயரெச்சத்திற்கு மீகையென்னும் பெயரினை
அவன்றான் வென்றியாடுதற்குக் கருவியாகிய கையெனக் கருவிப்
பெயராக்குக. மீகை - மேலெடுத்த கை.

     14. பொன்னங்கண்ணியும் பொலந்தேரும் நன்னற்கு அடையாக்குக.