பக்கம் எண் :

115

 10 மாயிருஞ் சென்னி யணிபெற மிலைச்சிச்
சேஎ ருற்ற செல்படை மறவர்
தண்டுடை வலத்தர் போரெதிர்ந் தாங்கு
வழையமல் வியன்காடு சிலம்பப் பிளிறும்
மழைபெயன் மாறிய கழைதிரங் கத்தம்
 15 ஒன்றிரண் டலபல கழிந்து திண்டேர்
வசையி னெடுந்தகை காண்குவந் திசினே
தாவ லுய்யுமோ மற்றே தாவாது
வஞ்சின முடித்த வொன்றுமொழி மறவர்
முரசுடைப் பெருஞ்சமத் தரசுபடக் கடந்து
 20 வெவ்வ ரோச்சம் பெருகத் தெவ்வர்
மிளகெறி யுலக்கையி னிருந்தலை யிடித்து
வைகார்ப் பெழுந்த மைபடு பரப்பின்
எடுத்தே றேய கடிப்புடை வியன்கண்
வலம்படு சீர்த்தி யொருங்குட னியைந்து
 25 காலுளைக் கடும்பிசி ருடைய வாலுளைக்
கடும்பரிப் புரவி யூர்ந்தநின்
படுந்திரைப் பனிக்கட லுழந்த தாளே.

     துறை - காட்சிவாழ்த்து. வண்ணம் - ஒழுகுவண்ணம். தூக்கு -
செந்தூக்கு. பெயர் - சுடர்வீ வேங்கை (8)

     (ப - ரை) 5. துறைகூடு கலப்பை - ஆடற்றுரைக்கு வேண்டுவன
வெல்லாம் கூடின 1முட்டு.

     கடவுட் பழிச்ச (6) அத்தம் (14) பல கழிந்து (15) காண்குவந்திசின் (16)
என முடிக்க.

     7-8. 2களிறு தன் சினத்தாற் செய்த செயலுக்கெல்லாம் வேங்கை
காரணமாய் நின்றமையான் இதற்கு, 'சுடர்வீ வேங்கை' என்று பெயராயிற்று.


     1முட்டு - முடிச்சு.

     2மலர்ந்த வேங்கைமரம் புலியைப்போன்ற தோற்றத்தை அளித்தமையின்
அது காரணமாயிற்றென்றார்; "கதழ்வாய் வேழம், இருங்கேழ்வயப் புலி வெழீஇ
யயலது, கருங்கால் வேங்கை யூறுபட மறலிப் பெருஞ்சினந் தணியுங் குன்ற
நாடன்" (
நற். 217 : 2 - 5); "உறுபுலி யுருவேய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவுகொண் டதன்முதற் குத்திய மதயானை" (
கலித். 38 : 6 - 7); "புலிக்கேழ்
வேங்கைப் பூஞ்சினை புலம்ப, முதல்பாய்ந்திட்ட முழுவலி யொருத்தல்"
(
அகநா. 227 : 8 - 9)