பக்கம் எண் :

117

     8-9. வரை சேர்பு எழுந்த - பக்கமலையைப் பொருந்தி வளர்ந்த.
ஒளிவிடும் பூக்களையுடைய வேங்கையினது பொலிவையுடைய பெரிய
கிளையை வளைத்துப் பிளந்து. 10. கரிய பெரிய தலையல் அழபெறச் சூடி.

     6-10. இளையர் கடவுளை வாழ்த்தும் ஒலியினைப் புலியினது முழக்க
மென்று எண்ணிய யானை, பூத்துப் பொலிந்த வேங்கைமரத்தைப் புலியென
எண்ணிச் சிதைத்தது.

     11. சேஎர் உற்ற - திரளுதல் பொருந்திய. செல்படை மறவர் -
பகைவர்மேற் செல்கின்ற சேனையிலுள்ள வீரர்; சேர் - திரளுதலென்னும்
பொருள்படும் உரிச்சொல் (தொல். உரி. 65)

     12. தண்டை யுடைய வெற்றியை யுடையவராகிப் போரை ஏற்றுக்
கொண்டு ஆரவாரித்தாற்போல (பதிற். 54 : 14) வேங்கைமரத்தின் கிளையை
ஏந்தியமையின் அக்கறிற்றுக்குத் தண்டுடை வலத்தரை உவமை கூறினார்.
களிறு (7), பிளந்து (9) மிலைச்சிப் (10) போரெதிர்ந்தாங்குப் (12) பிளிறும் (13)
அத்தம் (14) என இயைக்க.

     14. மழை பெய்தல் நீங்கிய மூங்கில் வாடிய அரிய வழிகள்;
"இரும்பணை திரங்கப் பெரும்பெய லொளிப்ப.........................அருவி யற்ற
பெருவறற்காலையும்" (பதிற. 43 : 12 - 4); "கழைகாய்ந் துலறிய வறங்கூர்
நீளிடை" (புறநா. 370 : 9)

     14-5. அரிய வழிகள் ஒன்று இரண்டு அல்லாதனவாகிய பலவற்றைக்
கடந்துவந்து.

     15-6. திண்ணிய தேரையுடைய பழியில்லாத நெடுந்கை, நின்னைக்
காணும்பொருட்டு வந்தேன். நெடுந்தகை: விளி. வந்திசின்: இசின் தன்மைக்கண்
வந்தது. (புறநா. 22 : 36, உரை.)

     17. தாவல் உய்யுமோ - வருத்தத்தினின்றும் நீங்குமோ. மற்று: அசை.

     17-8. வருத்தமின்றித், தாம் கூறிய சபதங்களை நிறைவேற்றிய, தம்
தலைவர் கூறுவதையே தாமும் கூறும் ஒன்றாகிய மொழியையுடைய வீரர்.

     19. பதிற. 34 : 10 - 11.

     19-21. முரசையுடைய பெரிய போரின்கண் அரசர்கள் இறக்கும்படி
வெல்லவேண்டியும், வெம்மையின் மிகுதி பெருகவும் பகைவரது கரிய
தலையை உலக்கையால் இடித்த மிளகைப் போல இடித்து, கடந்து - கடக்க;
எச்சத்திரிபு. மிளகெறியுலக்கையினென்பதனை, உலக்கையெறி மிளகின் என
மாறுக.

     22. வைகு ஆர்ப்பு எழுந்த - இடையறாமல் தங்கின ஆரவாரம் எழுந்த.
மை படு பரப்பின் - கருமையுண்டாகின்ற கடற்பரப்பில்.

     23. எடுத்தேறு ஏய - எடுத்தெறிதலை ஏவிய (பதிற. 84 : 1); கடல்பிறக்
கோட்டியவனாதலின் இது கூறினார்.

     கடிப்பு உடை வியல் கண் - குறுந்தடியால் அடிக்கப்படுதலையுடைய
அகன்ற கண்ணையுடைய முரசத்தால்; வியன்கண் முரசிற்கு ஆயிற்று.