பதிற்.
40 : 26. அகவலன்: குலத்தோரெல்லோரையும் அழைத்துப் புகழ்தல்
பற்றிப் பாணர்க்கு இப்பெயராயிற்று (மதுரைக்
.223, ந.)
நுண்கோல் அகவலன்: அகநா. 152 :
4. 208 : 3. அகவலர்க்கு மா
அளித்தல்: "நாளீண்டிய நல்லகவர்க்குத் தேரோடு மாசிதறி" (மதுரைக்.
223 -
4). என்று - என்று கூறி; உம்மை இசைநிறை பற்றி வந்தது.
29. இகல்வினை
மேவலை ஆகலின் - போராகிய வினையை
விரும்புதலையுடைய ஆதலால்.
29-31.
பகைவர்களும் மனம் அடங்காமற் புகழ்ந்த, மந்த
ஓசையையுடைய முழவினையுடைய அழியாத கல்வியை உடையோய், நின்
நிலைமையைக் கண்டோம். கற்பு - கல்வி (பதிற்.
80 : 17)
32. நிணத்தைச்
சுடுதலால் உண்டான புகையொடு நெருப்பு வெம்மையை
நீங்காமல்.
33. நிரம்புதலையும்
அகலுதலையும் அறியாத கோக்காலியினிடத்தே.
34. நிறைந்து நெடுநேரம் இராத பானைகளில் உள்ள.
34-6.
கூத்தர் உண்டனராகக் குறையாத கள்ளை அளித்தலையுடைய
வளவிய கையையுடைய அரசே, நின் ஆரவாரம் மிக்க மகிழ்ச்சிக் காலத்தே
கண்டிகுமெனக் கூட்டி முடிக்க.
(பி
- ம்.) 5. எண்ணுமெய். 10. சொல்புனனாட்டை. 12. பனைதிரங்க.
18.
தளிபொழிந்தாஅங்கு. (3)
44. |
நிலம்புடைப்
பன்னவார்ப் பொடுவிசும்பு துடையூ
வான்றோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப்
பெரிய வாயினு மமர்கடந்து பெற்ற
அரிய வென்னா தோம்பாது வீசிக் |
5 |
கலஞ்செலச்
சுரத்த லல்லது கனவினும்
களைகென வறியாக் கசடி னெஞ்சத்
தாடுநடை யண்ணனிற் பாடுமகள் காணியர்
காணி லியரோநிற் புகழ்ந்த யாக்கை
முழுவலி துஞ்சு நோய்தபு நோன்றொடை |
10 |
நுண்கொடி
யுழிஞை வெல்போ ரறுகை
சேண னாயினுங் கேளென மொழிந்து
புலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற்
கரண்கடா வுறீஇ யணங்குநிகழ்ந் தன்ன
மோகூர் மன்னன் முரசங் கொண்டு |
15 |
நெடுமொழி
பணித்தவன் வேம்புமுத றடிந்து
முரசு செய முரச்சிக் களிறுபல பூட்டி
ஒழுகை யுய்த்த கொழுவில் பைந்துணி
வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை |
|